விபத்துகளை தடுக்க வலியுறுத்தி  அதிகாரிகளிடம் மஜக வினர் மனு..!

கோவை.ஆக.25., பொள்ளாச்சி
ஜமீன் ஊத்துக்குளி
பேரூராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மீன்கரை ரோடு சீனிவாசபுரம் அருகில் தரைபாலத்தில் அதிகமாக விபத்துகள் ஏற்படுகிறது அதை தடுக்க மீன்கரை பிரதான சாலையிலிருந்து சீனிவாசபுரம் செல்லும் சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி 04.08.17 அன்று மனு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து
மீண்டும் இன்று (24.08.2018)
நினைவூட்டல் மனு
பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, தலைமையில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி
செயலாளர் ப.மன்சூர்,
பேரூராட்சி பொருளாளர்
கா.செந்தில்குமார்,
நகர துணை செயலாளர்கள்
ச.அன்சார், சா.அப்பாஸ்,
நகர மாணவர் இந்தியா
செயலாளர் சு.அலாவுதீன்,
நகர மருத்துவ அணி செயலாளர் அ.ஜான்ஸ்கான், நகர வர்த்தக அணி துணை செயலாளர் அ.அன்வர்சாதிக், பேரூராட்சி இளைஞரணி செயலாளர் அப்துல் நாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாக பொறுப்பாளரிடம் மனு அளித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
24.8.18