மஜக ஆக்கூர் கிளை கலந்தாய்வு கூட்டம்..!

நாகை.ஆக.24., வெள்ளிகிழமை அன்று மாலை 5 மணியளவில் நாகை வடக்கு மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம், ஆக்கூரில் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கை தாஜ்தீன் தலைமை தாங்கினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் லியாகத் அலி, அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரபி,கிளை பொருளாளர் முக்தார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ஜித்தா மண்டல ஆலோசகர் ரிபாய் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது

கிளை செயலாளராக A.தவ்பிக் அஹமது, கிளை பொருளாளராக H.முக்தார், கிளை துணை செயலாளர்களாக A.சல்மான்,T.முஹம்மது அஸாருதீன், M.முஹம்மது சஹின், மாணவர் இந்தியா கிளை செயலாளராக M.அமீருல் அஸ்லம்,மருத்துவரணி கிளை செயலாளராக A.R.முஹம்மது ஜெஸ்வத் அஸ்லம் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கல்லூரி மாணவர்கள் பலர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

பிழைப்புக்காக அயல்நாடுகளில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க,கேரளா அரசை போல தமிழக அரசும் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகின்றது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் இறுதியில் கிளை செயற்குழு உறுப்பினர் M.ஜெஹபர் சாதிக் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
#நாகை_வடக்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.