திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டிய மஜகவினர்..!

திருவாரூர். ஆக.19., திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேரளா மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் பணியில் மஜகவினர் இறங்கினர்.

புலிவலம் பகுதியில் தன்னார்வமாக நிதி திரட்டும் பெட்டிகளில் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கியவுடன், இந்த தன்னலமற்ற பணியினை அங்கு இருக்கக்கூடிய சகோதரர்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக இந்த நிதி திரட்டும் பணியின் மூலம் புலிவலம் பகுதியில் மட்டும் ₹8760 வசூலாகி உள்ளது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
19.08.2018