You are here

கேரளா மக்களுக்காக மஜக சார்பில் கோவையில் நிவாரண நிதி சேகரிப்பு.!

கோவை.ஆக.19.,. மனித நேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக பகுதி செயலாளர் காதர், தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக பிரச்சாரம்.

குறிச்சிபிரிவு, இட்டேரி, ஆத்துப்பாலம், பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் கேரள மக்களுக்காக உணவு உடமைகள் பொருளாதாரம் தந்து உதவினர்.

இந்நிகழ்வில் பொருளாளர் அபு, துணை செயலாளர் ஹாருண்ரஷீது, அக்பர் கான், மற்றும் குறிச்சிபிரிவு, ஆத்துப்பாலம், கிளை நிர்வாகிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
19-08-18

Top