மஜக நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மணிப்பூரில் நடந்துவரும் வன்முறைகளை கண்டித்து நாகை மாவட்டத்தில் வருகின்ற புதன்கிழமை மாலை 5 மணியளவில் அபிராமி சன்னதி அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செய்யது ரியாசுதீன், சேக் மன்சூர், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் கண்ணுவாப்பா (எ) சாகுல் ஹமீது, சேக் அஹமதுல்லா (ஆம்ஸ்), பாலமுரளி, பேபி ஷாப் (எ) பகுருதீன்,மாவட்ட அணி நிர்வாகிகள் ஜெக்கரியா, திருப்பூண்டிசாகுல் ஹமீது(IT WING), ரிபாயி, மாலிக், அனீஸ், இப்ராஹீம், முத்து முகமது, பிரவின்குமார், ஆதினங்குடி ஷாகுல் ஹமீது, நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், நகர நிர்வாகிகள் அஜிசுர் ரஹ்மான், சாகுல் ஹமீது, இப்ராஹிம், முகம்மது பைசல், அப்துல் காதர் (செல்லதுரை), தஸ்லிம், மற்றும் கிளை செயலாளர்கள் ஹாஜா முயுனுதீன், ஜியாவுல் ஹக், முகமது பைசல், தஸ்லிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.