வடசென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எழுச்சியுடன் நடைப்பெற்ற சுதந்திர தினவிழா…!

சென்னை.ஆக.15., நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும், இந்தியாவின் 72வது சுதந்திர தின விழாவின், ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக, வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திரு.வி.க நகர், பெரம்பூர் பகுதிகளில் சுதந்திர தின விழா, தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

திரு.வி.க நகர் பகுதி சார்பாக 73வது (மேற்கு) வட்டம் டிகாஸ்டர் சாலை- அம்பேத்கார் சிலை அருகிலும், 73வது (கிழக்கு) வட்டம் தாஷாமக்கான்- நியூ பேரன்ஸ் சாலை சந்திப்பிலும் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பெரம்பூர் பகுதி சார்பாக 34வது வட்டத்தின் சார்பாக
கவியரசு கண்ணதாசன் நகர்- மீனாம்பாள் சாலை சந்திப்பில்,
தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும், 35 வது வட்டம்
முத்தமிழ் நகர்- சிட்கோ தொழில்பேட்டை பகுதியில்
தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும், 36வது வட்டம்
மகாகவி பாரதி நகர்- பேருந்து நிறுத்தம் அருகில்
தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி
சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக: மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷபி,மனிதநேய ஜனநாயக கட்சி மனித உரிமை அணி மாநில செயலாளர் காஞ்சி சிந்தா மதார்,தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை வடசென்னை மாவட்ட பொருப்பாளரும் மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஷமிம் அஹமது ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் M.அன்வர், பெரம்பூர் அக்பர், ஓட்டேரி ரசாக், திரு.வி.க நகர் பகுதி நிர்வாகிகள் E.M.ஹனீப்,செல்வம்,நசீர்,ஷாஜஹான்,மஸ்தான்,பெரம்பூர் பகுதி நிர்வாகிகள் ரஷீத்பாய், ஹாதிபாய், இனாயத்,73வது வட்ட நிர்வாகிகள் நிஜாம், அல்தாப்,நிஸார்,பாஷா,மன்னான்,சலீம்,C.N.கரீம், அப்துல் சமது, 34வது வட்டம் ரபி, 35வது வட்டம தமீம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னை மேற்கு மஜக.