72வது சுதந்திர தின விழா..! கோட்டைப்பட்டினத்தில் மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது..!

அறந்தாங்கி.ஆக.15., இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு காலை 9மணியாளவில் கோட்டைப்பட்டினம் முன்னாள் விலாங்கா பள்ளி அருகில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் ஷாஜி தீன் தலைமையில், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன் (செல்லஅத்தா) மற்றும் மீனவர் அணி மாவட்ட செயலாளர் முஜிபு ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் எ.எம்.ஹாரிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கோட்டைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிக்கூடங்களில் மற்றும் பொதுமக்களுக்கு மஜக வாழ்த்துடன் கூடிய இனிப்புகள் 1500க்கும் மேற்பட்டோர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக அஜ்மீர் அலி (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்