நவ.09
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் 08.11.2020 அன்று மேலூரில் நடைபெற்றது.
மேலூர் நகர செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மற்றும் இணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தக்கடை பாருக் மற்றும் புதூர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர பொருளாளர் மஸ்தான், மதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சையத் அலி,
மாவட்ட தொழிற்சங்க செயளாலர் பஷீர் கான் மற்றும் ஒன்றிய, நகர , கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் செய்யது மஸ்தான், அவர்கள் நன்றியுரையாற்றினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மதுரை_மாவட்டம்
08.11.2020
Leave a Reply