You are here

திருப்பூரில் ஏராளமான இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர்.!

திருப்பூர்.ஆகஸ்ட்.04., திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காலேஜ்ரோடு மாஸ்கோ நகர் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,

வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கிளை செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் லியாகத் அலி தலைமை தாங்கினார்,
கிளை நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்,

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹைதர்அலி மாவட்ட பொருளாளர் முகமது அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் மேலும் பல புதிய கிளை நிர்வாகம் அமைக்க வேண்டும் எனவும் அக்டோபர் 7அன்று நடைபெறும் மாபெரும் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம்
பெரும் வெற்றியடைய மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தருவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின்போது மாஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்தோடு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை மனித நேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர் .

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
03-08-2018

Top