குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.ஆக.03, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் மேற்கு மாவட்டம் #குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் #S_அனீஸ் தலைமையில் சீத்தூர் கேட் பகுதியில் நடைபெற்றது,.

இக்கூட்டத்தில் கீழ்கண்டவாறு வருங்கால செயல்திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.மிக விரைவில் குடியாத்தம் நகரத்தில் தலைமை நிர்வாகிகளை அழைத்து மிக பிரமாண்டமாக சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடத்துதல்.

2.ஆகஸ்டு15 சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்தது 4 இடங்களில் தேசிய கொடி ஏற்றுதல்..

3.தீவிர உறுப்பினர் சேர்க்கை மூகாம்கள் நடத்தி 3 மாத காலக்கட்டத்தில் குறைந்தது 800க்கும் மேற்ப்பட்ட புதிய உறுப்பினர்களை சேவை அரசியலில் இணைத்தல்.

4.தலைமை நிர்வாகிகளை அழைத்து குடியாத்தம் நகரத்தில் 10க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மஜக கொடிகளை ஏற்றுவதுடன் குடியாத்தம் நகர அலுவலம் திறப்பு நிகழ்ச்சி நடத்துதல்.

5.பல்வேறு புதிய கிளைகளை கட்டமைத்தல்.

6.அனைத்து தரப்பு ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் மிக விரைவில் ஒரிரு மாதங்களில் மஜக குடியாத்தம் நகரம் சார்பாக ஆம்புலண்ஸ் அல்லது அமரர் ஊர்தி அர்ப்பணிப்பு செய்தல்.

7.வரும் அக்டோபர் மாதம் நகர பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துதல்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் #SMD_நவாஸ், மாவட்ட துணைச்செயலாளர் #I_முனவ்வர்_ஷரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நகர நிர்வாகிகள் சாபிர், பிலால் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகளும் மிகுந்த ஆர்வத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
#குடியாத்தம்_நகரம்
03.08.2018