திண்டுக்கல்லில் உற்சாகமாக நடைப்பெற்ற மஜக செயல்வீரர்கள் கூட்டம்!

திண்டுக்கல்.ஆக.02., திண்டுக்கல் மாவட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று உற்சாமாக நடைப்பெற்றது.

காலையில் திண்டுக்கல்லில் கல்லுரி மாணவர்கள், இளைநர்களுடன் #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அரசியல் கலந்துரையாடல் நடத்தினார்.

தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற நல்லெண்ண சந்திப்பும் நடைப்பெற்றது.

மாலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

தொடர்ந்து பொதுச் செயலாளர் அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வாகன ஊர்வலத்தோடு வந்து இரு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தனர்.

மாலை பேகம்பூரில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி , கொள்கை விளக்க அணியை சேர்ந்த பழனி.சாந்து முகம்மது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பல்வேறு சமூகங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி, பொருளாளர் சர்புதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் பரீத், ஷாகித் கான், ஹரி, மாவட்ட பேச்சாளர் கொடை. உசேன், முனாப்தீன், சாகுல் ஹமீது, ஜவஹர், அஸ்ரப் அலி, இப்ராம்ஷா, நாகூர் மீரான், அஸ்கர், நத்தம் ஜெய்லானி உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்