தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!

தூத்துக்குடி .செப்.14.,

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பில் கிளை செயலாளர் தமீம் அன்சாரி, தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது தாரிக், முன்னாள் கிளைச் செயலாளர் சதாம் உசேன், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ,கிளை பொருளாளர் முகமது ரிபாயில்,கிளை து. செயலாளர் அப்துல் அஜிஸ், முகமது சஹாப்தீன் மற்றும் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
13-09-2020