பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் தந்தையை உடல் நலம் விசாரித்த மஜக வினர்

உடல் நலம் சரியில்லாமல் காயல்பட்டினம் K.M.T. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருக்கும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர்

பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லா அவர்களின் தகப்பனாரை(வாப்பா) மனித நேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் நேரில் சந்தித்து உறவினர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது மருத்துவமனையில் இருந்த தமுமுக பொதுச்செயலாளர் P.S.ஹமீது மற்றும் தூத்துக்குடி மாவட்ட தமுமுக செயலாளர் யூசுப் ஆகியோரிடமும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த சந்திப்பில் மனித நேய ஜனநாயக கட்சி யின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் , ரியாத் மண்டல நிர்வாகி காயல் காதர் சாகிப், மாவட்ட துனை செயலாளர் முகம்மது நஜிப், தொழிற்சங்கஅணிசெயலாளர் ராசிக் முஸம்மில், காயல்பட்டினம் நகர செயலாளர் மொகுதூம், பொருளாளர் மீரான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில்
தமுமுக மாவட்ட துனை தலைவர் காதர் மற்றும் மமக காயல்பட்டினம் நகர தலைவர் ஜாகிர் ஆகியோரும் உடனிருந்தனர்.

#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
#31_07_2018.