முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் இல்லத்திற்கு மஜக பொதுச்செயலாளர் வருகை…!

திருச்சி. ஜூலை.05., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் சென்னையில் இருந்து திருச்சி வருகை தந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (#IUML) தேசிய தலைவர் பேராசிரியர் KM.காதர் மொய்தீன் அவர்களின் மனைவி உடல் நலம் குறித்து அவர்கள் இல்லத்திற்கு வருகைதந்து நலம் விசாரித்தார்.

நேற்று (04.07.2018) மாலை திருச்சி காஜா நகர், காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த மஜக பொதுச்செயலாளரை, பேராசிரியரின் மகன் ஹபீப் ரஹ்மான் அவர்கள் வரவேற்றார். பின்னர் பேராசிரியர் அவர்களின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார். பொதுச் செயலாளரிடம் உரையாடிய பேராசிரியரின் மனைவி, தாங்கள் என்னை சந்திக்க நேரில் வந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், சமுதாய மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும், தமிமுன் அன்சாரியும் எனக்கு ஒரு மகன் போலத்தான் எனக் கூறி உற்சாகமாக உரையாற்றினார். அந்த தாயாரின் வார்த்தைகளை கேட்ட பொதுச்செயலாளர் கண்கலங்கி இறைவன் அருளால் விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்கின்றோம் எனக் கூறி விடைப் பெற்றார். பேராசிரியர் இல்லத்தில் இல்லாததால் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தார் மஜக பொதுச்செயலாளர் அவர்கள்.

இச்சந்திப்பின் போது மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மற்றும் காட்டூர் சித்தீக் மற்றும் மஜக மாவட்ட, நகர, நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்