திருப்பூரில் புதிய காவல்துறை ஆணையாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.!

திருப்பூர்.ஜுன்.29., திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள திரு.மனோகர் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து வாழ்த்து கூறினர்.

அப்போது திருப்பூரில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, லியாகத் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
29-06-2018