காயல்பட்டினத்தில் மஜகவின் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி..!

தூத்துக்குடி.ஜூன்12., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

#மஜக நகர செயலாளர் மொகுதூம் அவர்களின் தலைமையில், நகர பொருளாளர் மீரான் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப் அவர்கள் வரவேற்புரையாற்றினார், மாவட்டம் செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் காயல்பட்டினத்தை சார்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் குறிப்பாக SDPI, விசிக, நாம் தமிழர், மதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், I.N.T.J உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் காக்கும் கரங்கள் நற்பணிமன்றம், நடப்பது என்ன? ஊடக குழுமம், உரிமைக்குரல் ஊடக குழுமம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் நகரின் பல்வேறு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைத்தது.

இந்நிகழ்வு முடிந்த உடன் கூடுதலாக இருந்த கஞ்சி மற்றும் பண்டங்கள் அனைத்தையும் அருகில் அமைந்துள்ள கருனாலயா ஆதரவு அற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜகவின் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், ஆழ்வார் ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக்முஸம்மில், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெயிலானி ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் ஜிப்ரி, ஜியாவுதீன், மொகுதூம், ஜரித், சதாம் உசேன், யூசுப், பாட்சா, அப்துல்ரஹ்மான், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
11-06-2018