பெ.மணியரசனை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! கல்பாக்கத்தில் மஜகவின் இஃப்தார் நிகழ்ச்சியில் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

காஞ்சி தெற்கு மாவட்டம் கல்பாக்கத்தில் (11.06.2018) நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச்செயலாளர் A.சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்பாக்கம் சுற்று வட்டாரத்தை பல்வேறு சமூக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் புதிய தலைமுறையின் மீதும், இயக்குநர் அமீர் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசனை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் U.ரஹ்மத்துல்லா, தலைமை தாங்கினார், IKP மாவட்டச் செயலாளர் H. அப்துல் ரஷீத்
அனைவரையும் வரவேற்றார், S.சமியுல்லா மாவட்ட துணை செயலாளர், A.முஹம்மது ரஃபீக் மருத்துவ சேவை அணி செயலாளர் M.இனாயத்துல்லா மாவட்ட இளைஞரணி செயலாளர், J.தமீம் அன்சாரி மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், K.ஜாகிர் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர், கல்பாக்கம் கிளை நிர்வாகிகள், கானத்தூர் கிளை நிர்வாகிகள், மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்துகொண்டனர். K.அப்துல் சர்தார் மாவட்ட துணை செயலாளர் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சி_தெற்கு_மாவட்டம்