மஜக பஹ்ரைன் மண்டல இஃப்தார்..! அரங்கம் நிரம்பிய கூட்டம்..!!

பஹ்ரைன்.ஜூன்.04.,மஜக வின் அயல் நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தேறிய சமய நல்லிணக்க இஃப்தார் , மாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கானோர்
குவிய துவங்கினர் ஏராளமான இஸ்லாமியரல்லாதோர் கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தினர் .

பஹ்ரைனில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியரல்லாதோர் பெருமளவில்
கலந்துக்கொண்டு சிறப்பித்தது இந்த நிகழ்வில் தான் என்று எல்லோரும் வியந்து பாராட்டினர் .

அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினர் , தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் வருகை
தந்து சிறப்பித்தனர் .

தமிழ் சங்க நிறுவனர் மாலிம் , தமிழ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கையூம் , தொழிலதிபர் இணையத்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

மண்டல நிர்வாகிகள் மிகச்சிறப்பாக பணியாற்றி கூட்டத்தை நெறிப்படுத்தி அனைவரையும் இன்முகத்தோடு உபசரித்தனர் .

மஜக இப்தார் தமிழ் சமூகத்தில் இணக்கமான சூழலை உருவாக்கியிருக்கிறது .