இதயங்களால் ஒன்றினைவோம்..! மதுரையில் மத நல்லிணக்க விழாவாக மாறிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி..!!

மதுரை.மே.31. மதுரை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு எனும் #இஃப்தார்_நிகழ்ச்சி ஒத்தக்கடையில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒத்தக்கடை ஜமாத்தார்களும் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த #மஜக மாநில #துணைப்பொது_செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் மற்றும் மன்னை.செல்லச்சாமி ஆகியோர்
சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்.,

மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில்
மாவட்ட பொருளாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார்.

மதுரையில் மக்கள் பணியாற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

இதில் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவி ராஜ், ராஜேஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற
இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம்.
30.05.2018