வேல்முருகனுடன் தமிமுன் அன்சாரி, தனியரசு சந்திப்பு!

சென்னை. மே.29., தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டால் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்திக்க சென்ற போது, #தமிழக_வாழ்வுரிமை_கட்சி தலைவர் வேல்முருகனை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அங்கு அவர் தண்ணீர் கூட அருந்தாமல் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று அவரை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

மேலும் உயர் மருத்துவர்களை தொடர்புக் கொண்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இவர்களுடன் மஜக மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது, திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர், மாணவர் இந்தியா மாநிலச்செயலாளர் அஸாருதீன், மாநில துணை செயலாளர் கோவை பஷீர் ஆகியோர் உடன் சென்றனர்.

வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி இன்று பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் நடத்திய கூட்டு ஆர்ப்பாட்டத்தில் மஜக சார்பில் மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது பங்கேற்றார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#சென்னை.
29/05/2018