சென்னையில் முதல் கோடைக்கால தண்ணீர்பந்தல்..! மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.!

சென்னை.மார்ச்.13.,

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புதுப்பேட்டையில் #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் முதல் கோடைகால தண்ணீர் பந்தல் துவங்கப்பட்டது. சென்னையில் இதுவே இவ்வாண்டிற்காக முதல் முயற்சி என்றும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் சென்ற 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானங்கள் கொடுத்து மஜக பொதுச்செயலாளர் #முதமிமுன்அன்சாரி MLA., துவக்கி வைத்தார்.

பேருந்து, ஆட்டோ, தட்டு ரிக் ஷா, இரு சக்கர வாகனங்களில் சென்றோருக்கும் விநியோகம் செய்யப்பட்டது

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சலீம், MJTS அப்துல் கரீம்,சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் தாஜ், MJVS T.M.யூசுப், கிளை நிர்வாகிகள் R.பஷீர், குலாப் பாஷா, ஜப்பார், நிரோஷ் மீரான், சாகுல் ஹமீது, அசன் அலி, ஷராவ(F)த், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளாள கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
13-03-2020