ஏப்ரல்.07., திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நேரு அவர்கள் உடனிருந்தார். 'இவர் இது போன்ற நேரங்களில் எப்போதும் நம்மோடு இருப்பவர்' என தலைவர் அவர்களை பற்றி அமைச்சர் நேரு குறிப்பிட்டார். மாலை 3.45 மணிக்கு பாரதி நகரில் பரப்புரையை பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். VNP தெரு, ஆட்டுமந்தை தெரு, மூவேந்திரர் நகர், சங்குளத்தான் கோவில், காந்திபுரம், சோமராஜபுரம் ஆகிய இடங்களில் அவர் பேசினார். மேற்கண்ட இடங்களில் அவர் பேசிய உரைகளின் சாரம்சம் பின்வருமாறு... பிரதமர் மோடி தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறார். செம்மொழி தமிழ் மொழிக்கு அவர் ஒதுக்கிய வளர்ச்சி நிதியை விட, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதிதான் அதிகம். குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப் போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 971 கோடியை ஒதுக்கியது ஆனால் தமிழ்நாட்டில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப்போது அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தார்கள். தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான அரசு ஒன்றியத்தில் இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை
Month:
நியமனம்
நெல்லை பரப்புரை… ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக மாறியிருக்கிறது! மு.தமிமுன் அன்சாரி பேச்சு..
ஏப்ரல்.6., திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ் அவர்களுக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, அமைச்சர் தங்கம். தென்னரசு, முன்னாள் மத்திய அமைச்சர் K.V. தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன் Ex MP ஆகியோர் பங்கேற்றனர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசியதாவது... காங்கிரஸ் கட்சி தந்த பிரதமர்களால் இந்தியாவின் பெருமை சர்வதேச அரங்கில் உயர்ந்தது. மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் பெருமை சீர்குலைந்துள்ளது. இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி கூறுகிறார். அவர் 10 லட்சம் ரூபாய்க்கு கோட் சூட் அணிந்தார். தற்போது அவர் அணிந்துள்ள கூலிங் க்ளாஸின் மதிப்பு 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாகும். அவர் தான் முன்னேறியுள்ளார். இவரது ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் லட்சக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் 16 மாதங்கள் இவரது ஆட்சியில் டெல்லியில் போராடியுள்ளனர். இவர்களது ஆட்சியில் வெளிநாட்டு உணவான பர்கருக்கு GST வரி குறைவாம். குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு அதிக வரியாம். இதுதான் இவர்களது தொழில் கொள்கை. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் கலவரத்தால் ரத்த சகதியில் மூழ்கியது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சொந்த நாட்டு மக்களை மோடி போய் பார்த்து ஆறுதல்
நெல்லையில்… MOC இல்லத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! நெல்லை இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களும்.வருகை…
ஏப்ரல்.06., நெல்லையில் சிறப்பு வாய்ந்த முஸ்லிம் அனாதை இல்ல (MOC) வளாகத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண வருகை தந்தார். அவரை இதன் தலைவர் M.K.M கபீர் அவர்களும், செயலாளர் டாக்டர் MKM முகம்மது சாபி அவர்களும் வரவேற்றனர். 1957-ல் மேடை முதலாளி எனப்படும் அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்கள் முன்முயற்சியில் காயிதே மில்லத் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் துணையோடு இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. பெட்டைக்குளம் காதர் மீரான் சாகிப் போன்றோர் இடங்களை தானமாக அளித்துள்ளனர். மறைந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் சாகிப் அவர்களின் முன் முயற்சியில் தான் நெல்லை சீமையில் புகழ்பெற்ற சதக்கத்துல்லா அப்பா கல்லூரியும் நிறுவப்பட்டது. அதன் பிறகு ஜமால் முகம்மது அவர்கள், செய்யது பீடி நிறுவனர் நெய்னா முகம்மது ஆகியோர் இதனை அடுத்தடுத்து சிறப்பாக வழிநடத்தியுள்ளனர். 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள MOC - வளாகத்தில் இயங்கும் +2 வரையிலான அரசு உதவிபெறும் பள்ளியும் அனாதை மற்றும் ஏழ்மை பின்னணியில் உள்ள மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் பயில்கின்றனர். விடுதி வசதிகளும் இருக்கிறது. இதன் சேவைகளை கேட்டறிந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், இதன் நிறுவனர்கள் மற்றும் அன்று பணியாற்றியவர்கள், இன்று
நாகையில்…. அமைச்சர் திரு உதயநிதி பரப்புரை!! மஜக வினர் திரளாக பங்கேற்பு…
ஏப்ரல்;6. நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் CPI வேட்பாளர் செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்து அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் வருகை தந்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர். கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பரித்த மஜக-வினரின் எழுச்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்த்து கையசைத்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மஜக-வினரின் எழுச்சியை பாராட்டினர். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட அவை தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் உமர் முக்தார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், நாகை ஒன்றியம் மஞ்சை சதாம், நாகை நகர துணை செயலாளர் செல்லத்துரை (எ) அப்துல் காதர், சுலைமான் அனஃப், நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, யாசர் முகமது, சஃபியுல்லா,IT இஸ்மாயில் மற்றும் அப்துல் ரஹ்மான், பொரவச்சேரி கண்ணுவாப்பா, அனஸ் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #நாகை_நாடாளுமன்ற_தொகுதி 05.04.2024.