திருச்சியில் பரப்புரை! இந்திய ஜனநாயகம் இருளில் உள்ளது! அதில் வெளிச்சம் பாய்ச்ச தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிப்பீர்! துரை வைகோவுக்கு வாக்கு கேட்டு …. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.07.,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் நேரு அவர்கள் உடனிருந்தார்.

‘இவர் இது போன்ற நேரங்களில் எப்போதும் நம்மோடு இருப்பவர்’ என தலைவர் அவர்களை பற்றி அமைச்சர் நேரு குறிப்பிட்டார்.

மாலை 3.45 மணிக்கு பாரதி நகரில் பரப்புரையை பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.

VNP தெரு, ஆட்டுமந்தை தெரு, மூவேந்திரர் நகர், சங்குளத்தான் கோவில், காந்திபுரம், சோமராஜபுரம் ஆகிய இடங்களில் அவர் பேசினார்.

மேற்கண்ட இடங்களில் அவர் பேசிய உரைகளின் சாரம்சம் பின்வருமாறு…

பிரதமர் மோடி தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறார்.

செம்மொழி தமிழ் மொழிக்கு அவர் ஒதுக்கிய வளர்ச்சி நிதியை விட, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதிதான் அதிகம்.

குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப் போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 971 கோடியை ஒதுக்கியது

ஆனால் தமிழ்நாட்டில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப்போது அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தார்கள்.

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான அரசு ஒன்றியத்தில் இருக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களின் அதிகாரத்தை குறைத்து, ஆளுனர்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் திட்டத்துடன் மோடி உள்ளார்.

ஒன்றிய பாஜக அரசையும், மோடியையும் வீழத்த இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் நாம் வெற்றிப் பெற்று, அடுத்த பிரதமரை தமிழ்நாடு தேர்வு செய்யும் வரலாற்று வாய்ப்பை உருவாக்கி தாருங்கள்.

நாடாளுமன்றத்தில் – மாநிலங்கள் அவையில் தமிழ்நாட்டிற்காகவும், தமிழர்களுக்காகவும் சமரசம் இன்றி முழக்கமிட்டவர் அண்ணன் வைகோ.

அவரது மகனும் எனது நண்பருமான துரை வைகோவை வெற்றி பெற செய்யுங்கள்.

இந்தியாவின் ஜனநாயகம் இருளில் இருக்கிறது.

அதில் வெளிச்சம் பாய்ச்சிட தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள்.

இங்கு அண்ணன் அமைச்சர் நேரு நிற்கிறார். அவர் துடிப்பானவர். (அமைச்சர் சிரிக்கிறார்)

தமிழ்நாட்டு முதல்வர் தளபதியிடம் பேசி 3 ஆயிரம் கோடி நிதியை திருச்சிக்கு கொண்டு வந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அவரது உழைப்புடன் உங்கள் முன் நிற்கும் நண்பர் துரை வைகோவை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்டச் செயலாளர் பாபு, அவைத்தலைவர் சேக்தாவூது, பொருளாளர் செய்யது முஸ்தபா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால்தீன், துணைச் செயலாளர்கள் சேக் அப்துல்லா, அன்வர், சேக் மெய்தீன், செய்யது முகம்மது, MJTS மாவட்டச் செயலாளர் கமால் பாஷா, பொருளாளர் முகமது ஜீ பேர் உள்ளிட்டவர்களும், திரளான மஜக-வினர் தொடர்ந்து கடும் வெயிலில் மூன்று மணி நேரம் பரப்புரையில் பங்கேற்றார்கள்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
#திருச்சி_பாராளுமன்ற_தொகுதி
07.04.2024.