மார்ச்.05., சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 24 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-ஆம் நாளான இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு அளித்து பேசினார். அப்போது பத்திரிக்கையாளர்களிடமும் விரிவாக பேட்டியளித்தார். பிறகு அவர் உண்ணாவிரத களத்தை ஆதரித்து பேசியதாவது... கடந்த 07.12.2006 -ல் அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக்கும் கோப்பை ஒன்றிய அரசுக்கு, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.. இன்று வரை அதற்கு பதிலில்லை. தமிழின் மீது பற்று இருப்பது போல காட்டும் பிரதமர் மோடி அரசு இதை செய்திட வேண்டும் தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதற்கு முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் சட்ட அமைச்சர் மாண்புமிகு திரு.ரகுபதி அவர்களை இங்கு அனுப்பி வைக்க வேண்டும். ராஜஸ்தான், உ.பி, ம.பி, பீஹார் மாநிலங்களில் இந்தி அந்தந்த மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக உள்ளது. அதை எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காட அனுமதிக்க
Year:
தொடரும் இணைவுகள்… நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்….
மார்ச்.04., நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் மையில் கிளைச் செயலாளர் சர்புதீன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் பாடந்துறை, மங்குழி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் செமீர், மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், சிஹாப், முஜீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 03.03.2024.
மஜக தலைமையகத்திறகு…. உ.தனியரசு வருகை பொதுச்செயலாளர் மெளலா நாசருடன் சந்திப்பு….
மார்ச்.04., தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு Ex.MLA, அவர்கள் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மெளலா நாசர் வரவேற்று 'செங்கோட்டை முழக்கங்கள்' என்ற நுலை வழங்கி சிறப்பித்தார். பிறகு இருவரும் நடப்பு அரசியல் சூழல் குறித்து பேசினர். இச்சந்திப்பின் போது மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, மனிதநேய வழக்கறிஞர் பாசறை செயலாளர் வக்கீல். அமீன், அதன் மாநில துணைச் செயலாளர் ஸ்வாதிஸ் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைப்பெற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 04.03.2024 https://www.facebook.com/share/p/y1a2BFa794mnMj8E/?mibextid=Nif5oz
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) F.அலாவுதீன் அலைபேசி; 8870201820 2) S.நிஜாமுதீன் அலைபேசி; 7339510474 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 04.03.2024.