தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 109-வது நாளான இன்று அவர்களுக்கு ஆதரவளித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன அன்சாரி அவர்கள் அவர்களது களத்தில் பங்கேற்றார். அவருடன் மாநில துணை செயலாளர் அகமது கபீர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் பண்டாரவாடை மஹ்ரூப் ஆகியோரும் வருகை தந்தனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், விவசாயிகளின் பெயரில் அந்த ஆலை வாங்கிய 300 கோடி ரூபாய் கடனை வாக்களித்தப்படி அந்த ஆலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 112 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் இதில் தமிழக அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கூறினார். பிறகு மஜக-வினரும் விவசாயிகளும் இணைந்து முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் குடந்தை ஆசாத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெய்னுதீன், இக்பால் சேட், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, பண்டாரவாடை பாஸித்,
Month:
அறந்தாங்கியில் பட்டமளிப்பு விழா..! எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஃபிஜ்ருல் ஹுதா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று 'பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி உள்ள உரிமைகள்' குறித்து பேசினார். மார்க்கம், அது சார்ந்த வாழ்வியல், குடும்ப நிர்வாகம், பொது அறிவு, சமூக சேவை என அனைத்திலும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என வாழ்த்தி பேசினார். பன்முக சமூக அமைப்பில் பிள்ளைகள் வளரும் நிலையில், புரிதலும் - இணக்கமும் சூழ அவர்களை வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றார். இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஜாக் அமைப்பைச் சேர்ந்த மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மாநில துணைச் செயலாளர்கள் பேராவூரணி சலாம், ஏ.எம்.ஹாரிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமையக அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகள் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக அமைப்பாக செயல்படும். மேலும் மாதாவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய தொகுதிகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகமாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15.03.2023
நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக, அ.ரபீக் காளம்புழ, மைசூர் ரோடு கூடலூர், நீலகிரி அலைபேசி:7540078800 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15:03:2023
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைப்பெற்றது. மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நிகழ்ச்சிகள், நிர்வாக சீரமைப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் தொகுதிகள் மற்றும் மாவட்ட மாற்றங்கள் குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்த்தில் மாவட்ட செயலாளர் S.M.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலானா, அன்சர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஷாஹின்ஷா, அப்ரார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.