கன்னியாகுமரி.ஜூலை.13., வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வரும் தமிழக மக்களுக்கு உணவு மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்வது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையான e-pass வசதிகளையும் குமரி மாவட்ட மஜக-வினர் செய்து வருகின்றனர். இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச்செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நிர்வாகிகள் இன்று டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் அவர்களை சந்தித்து பேசினர். இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மஜகவினர் எடுத்துரைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரினர். அவர் மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கு உண்டான சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக வாக்களித்தார். இச்சந்திப்பின் போது மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ் மற்றும் மாநகரச் செயலாளர் அமீர்கான் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 13-07-2020
Month:
அரசு ஊழியர்களுக்கு ஹோமீயோபதி மாத்திரைகள் அதிரை மஜக சார்பில் விநியோகம்!
ஜூலை.13, அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமிஹோபதி மருந்தான 'அர்சானிக் ஆல்பம் 30' அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. முதற்கட்டமாக காவல் துறை, பேரூராட்சி அலுவலர்கள், மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு நகர பொருளாளர் அஷ்ரப் தலைமையில் இம்மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அகமது அஸ்கர், தொழிற்சங்க செயலாளர் ஆரிப், தொண்டரணி செயலாளர் நபில், மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்டமாக அதிரை பகுதியில் தேவைப்படும் பொதுமக்கள் மஜக வினரை கீழ்கண்ட தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டால் நேரில் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளனர். தொடர்புக்கு: 7010832030, 8667577437, 7530005823, 9976921145. தகவல் #மஜகதகவல்தொழில்நுட்பஅணி #MJKitWING #அதிரைநகரம், #தஞ்சைதெற்கு_மாவட்டம்.
மாணவர் இந்தியாவுடன் இணைந்து மஜகவினர் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.13, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மற்றும் மஜக இணைந்து அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலைமையில் பொருளாளர் ஷாரூக்கான் முன்னிலையில் மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகத்தைத் துவங்கி வைத்தார். முன்னதாக அறந்தாங்கி நகர செயலாளர் சேக் பரீத் அனைவரையும் வரவேற்றார். மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் உமர் ஃபாரூக், கலந்தர் மைதீன், முகம்மது அஸ்லம், அறந்தாங்கி நகர துணைச் செயலாளர்கள் முகம்மது இர்ஃபான், ராகிப் கான், அனஸ் தாஹா உள்ளிட்டோர் வீதிவீதியாக விநியோகித்தனர். மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்களை எடுத்துவந்து ஆர்வமுடன் கபசுர குடிநீரை பெற்று சென்றனர். நபர் ஒருவருக்கு 30 மி.லி என சுமார் 3000 நபர்களுக்கு விநியோகித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளர், சேக் முஹம்மது அப்துல்லாஹ் பண்டாரவாடை அலைபேசி; 9677817920 மாவட்டப் பொருளாளர், நிஜாம் மைதீன் கும்பகோணம் அலைபேசி; 9629765428 மாவட்ட துணைச் செயலாளர்கள், 1) இப்ராஹிம் ஷா கும்பகோணம அலைபேசி; 9894400866 2) ஆசாத் அலி கும்பகோணம் 8760882742 3) சையது இப்ராஹிம் கொ. கருப்பூர் அலைபேசி;8610424140 4) முஹம்மது இப்ராஹிம் (செல்லராஜா) பண்டாரவாடை அலைபேசி; 9003068275 5) முஹம்மது ஃபாரூக் சோழபுரம் அலைபேசி; 9444708298 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 13-07-2020
கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படும் கார்டூனிஸ்ட் வர்மா மீது மாவட்ட காவல் ஆணையரிடம், மஜக சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது..!
ஜூலை.13., தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாக கார்டூனிஸ்ட் வர்மா என்ற நபர் சமூக வளைதளங்களில் நச்சு கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று உலக மக்கள் தங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வரைந்து வெளியிட போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் கார்டூனிஸ்ட் வர்மா மீது நடவடிக்கை கோரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மஜக மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது தலைமையில் நிர்வாகிகள் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர். புகார் மனுவை பெற்று கொண்ட காவல் ஆணையாளர், இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க பாசிச சிந்தனையாளர்கள் திட்டம் தீட்டுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக கார்டூனிஸ்ட் வர்மா போன்ற பலர் சமூக வளைதளங்களில் கலவரத்தை தூண்டும் நச்சு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இப்படியான நபர்கள்