நாகையில் சமீபத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி அன்பளிப்பு பைகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வழங்கினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
Month:
மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் நலம் விசாரிப்பு…
மஜக மீனவர் அணி செயலாளர் பார்த்திபன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சகோதரர் பார்த்திபன் அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது அவர்கள் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மருத்துவமனை சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர். சகோதரர் பூரண உடல் நலம் பெற நாமும் பிராத்திப்போம். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு…
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழகத்தில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் வெற்றிப் பெற மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும். இத்தொகுதிகளில் மஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அதிமுக கூட்டணியின் வழிகாட்டுதலோடு இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.10.16
நெய்வேலியில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்ச்சாக வரவேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு இரவு 9 மணி அளவில் வருகை தந்தார்கள். அவர்களுடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜீதீன் அவர்கள், நாகை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் வருகை புரிந்தனர். கடலூர் மாவட்ட செயலாளர் N.இப்ராகிம், மாநில செயற்க்குழு உறுப்பினர் P.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் நெய்வேலி நகர நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களை அ.தி.மு.க நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான திரு.K.மனோகர் அவர்கள், திராவிட தொண்டு மைய தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான திரு.R.PS. பன்னீர் செல்வம் அவர்கள், அரிமா சங்க தலைவர் திரு.C.லட்சுமிநாராயணன் அவர்கள், அரிமா சங்க செயலாளரும் M.R.சரீப் அறக்கட்டளை தலைவரும்மான Ln. R.அன்வர்தீன்அவர்கள், அ.தி.மு.க மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் திரு.பாலு அவர்கள், அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. A.நாசர் அவர்கள், மந்தாரக்குப்பம் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலின் துணை செயலாளரும் அர்-ரகமத் பள்ளின் தாளாரும்மான ஹாஜி.நஸ்ருல்லா அவர்கள்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் ஜமாத் சந்திப்பு!
திருவண்ணாமலையில் மஜக நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பல்வேறு ஜமாத்துகளை சந்தித்தார். அவருடன் பொருளாளர் S.S.ஹாரூன் ரசீத்,அவைத் தலைவர் S.S.நாசர் உமரி, மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர்களும் வருகை தந்தனர். திருவண்ணாமலை நகர செயலாளர் S.முஹம்மத் ரபீக் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை மாநில நிர்வாகிகள் வாழ்த்தினார்கள். பிறகு திருவண்ணாமலை மற்றும் செங்கம் மஹல்லா ஜமாத்துகளை சந்தித்து பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. அதன் பிறகு கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டைக்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்களுக்கு மஜக சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜமாத் பிரமுகர்களையும், அனைத்து கட்சி நண்பர்களையும் சந்தித்து உரையாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தகவல்; மஜக_ஊடகப்பிரிவு