அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது. அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தை இஸ்லாமிய காலச்சார பேரவை(IKP) செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி வைத்தும், இஸ்லாத்தில் நற்பண்புகள் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றினார். துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக நிர்வாக வசதிக்காக வேண்டி புதிய நிர்வாகிகளை இனைத்து நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இனி அமீரக நிர்வாகிளாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்.. அமீரக செயலாளர் - மதுக்கூர்.S.அப்துல் காதர் மூத்த ஆலோசகர் - M.A.சர்புதீன் பொருளாளர் - அதிரை அஸ்ரப் இஸ்லாமிய கலாச்சார பேரவை. - திருச்சி அப்துல் ரஹ்மான் தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் - Y.M.ஜியாவுல் ஹக் துணை செயலாளர்கள் : நாச்சிகுளம் A.அசாலி அஹமது K.M.A.முகமது அலி ஜின்னா H.அபுல்ஹசன் Y.அப்துல் ரஜாக் H.M.பதாஹூல்லா ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டனர். இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக வார பயான்கள் மற்றும் மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும்,
Month:
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…
அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிராஅத் கைத்தான் கிளை செயலாளர் சகோ. சர்புதீன், வரவேற்புரை மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. அபுபக்கர் சித்திக், நிகழ்த்த இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் மண்டல வரவு செலவு விபரங்களை மண்டல பொருலாளர் சகோ. முஹம்மது நபீஸ் அவர்கள் ஒப்படைக்க வரவு செலவு விவரங்கள் சரிபார்க்கபட்டது, இதனை தொடர்ந்து மஜகவில் இணைந்த சகோதரர்கள் தங்களது அறிமுக உரை நிகழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து வரும் டிச.23 ஆம் தேதி குவைத்தில் மண்டல மாநாடு நடத்துவது குறித்து அனைவரிடத்திலும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் விளக்கினார். மாநாட்டின் பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் தேர்வு செய்து மாநாடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இறுதியாக சால்வா கிளை பொருலாளர் சகோ முகம்மது மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவு பெற்றது. தகவல்
SIOவின் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமீமுன்_அன்சாரி Mla கலந்து கொண்டு சிறப்பித்தார்.
SIO (Student’s Islamic Organization of India) சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் 26/10/2016 அன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வியாளர் அஃப்ஸல் ஹூஸைன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர். உடன் மாணவர் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
அதிரையில் பேரெழுச்சி! பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திரண்ட அதிரை மக்கள்!
அக்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று (28.10.2016) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது. 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அடுத்த 10, 20 நிமிடங்களில் அதிரையின் பல்வேறு தெருக்களை சேர்ந்த ஜமாத்தார்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்ட இடத்தில் திரண்டனர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் பேசத் தொடங்கியபோது, ஒருக்கட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் வாகனப் போக்குவரத்து நெரிசலானது. பிற சமூக மக்களும் உரையை கேட்க திரண்டதால், ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் பன்மடங்காகியது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை சாடினார். அப்போது பேசியதாவது, பிரதமர் மோடியின் மனைவி குஜராத்தில் தனியாக வசிக்கிறார். இருவரும் சேர்ந்து வாழவில்லை.பிரதமர் மோடி தன் மனைவியை பராமரிக்கவில்லை. அவருக்கு உதவித் தொகையை வழங்கவில்லை. இதை ஒன்றை காரணம் கூறி இந்து மதமே பெண்களை கொடுமைப் படுத்துவதாக கூறினால் அது எப்படி அபத்தமோ.... அப்படித்தான் தலாக் விஷயத்தை பார்க்க வேண்டும். எங்காவது ஒரு முஸ்லிம் பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அதற்காக
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! தமிழக அரசுக்கு மஜக பாராட்டு!
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பறது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 25.10.2016 அன்று இது குறித்து மத்திய அரசு டெல்லியில் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டு, பல கேள்விகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டை, சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறியபோது, தமிழகத்தின் நலன்களையும், சிறுபான்மை மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என தெரிவித்ததை, இன்று தமிழக அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..... நன்றி ! இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27_10_16