அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு…

(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் வெற்றிப் பெற மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்.

இத்தொகுதிகளில் மஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு,
அதிமுக கூட்டணியின் வழிகாட்டுதலோடு இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.10.16