கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளிகூடத்தில் கடந்த 24.07.2016 ஞாயிறு அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . பள்ளி தாளாளர் அலிகான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் . அங்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பள்ளி முதல்வர் தலைமையில் மாணவ – மாணவிகள் வரவேற்பு கொடுத்தனர் . அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது … இளம் வயதிலேயே நாம் எதற்காக படிக்கிறோம் ? எதை நோக்கி படிக்கிறோம் ? என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் . நமது கல்வி மனிதாபிமான சிந்தனைகளையும் , பிறர் நலம் நாடும் எண்ணங்களையும் வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும் . நல்ல பண்புகளுடன் கூடிய கல்விதான் வெற்றியை தரும் . வெறும் மனப்பான இயந்திரங்களாக மாறிவிடக்கூடாது . பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அந்த சிந்தனைகளை ஆசிரியர் – ஆசிரியைகள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும்
தமிழகம்
தமிழகம்
தொண்டியில் பேருந்து பணிமனை அமையவேண்டும் ! கருணாஸ் MLA விடம் மஜக வேண்டுகோள் !
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டியில் முன்பு அறிவிக்கப்பட்ட அரசு பேருந்து பணிமனையை தொண்டியிலிருந்து திருவாடானைக்கு மாற்றக்கூடாது என்றும் , அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொண்டியை சேர்ந்த மஜகவினரும் , சமூக ஆர்வலர்களும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களை தொடர்புகொண்டு பேசினர் . இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சந்தித்து , மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA தொண்டி மக்களின் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினார் . இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கருணாஸ்MLA தெரிவித்தார் . மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி தொண்டியில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்தால் , அது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கருணாஸிடம் கோரிக்கை வைத்தார் . - மஜக ஊடகப்பிரிவு
காஷ்மீர் பெண்களை கற்ப்பழிப்பதா தேச பக்தி? திருச்சியை உலுக்கிய மஜகவின் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் ராசுதீன் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தலில் மாலை 4 மணியளவில் மஜவினரும்,பொது மக்களும் திரண்டனர். மஜகவின் அழைப்பினை ஏற்று திரண்ட மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். #காஷ்மீர்_மக்களின்_போராட்டம்__தேசிய_இனத்தின்_போராட்டம் #காஷ்மீர்_பெண்களை_கற்ப்பழிப்பதற்க்கு_பெயர்_தேச_பக்தியா? #காஷ்மீர்_குழந்தைகளை தாக்குவதற்கு_அரச_படைகளுக்கு_அதிகாரமா? மத்திய அரசே...காஷ்மீரில் ராணுவத்தில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்து போன்ற பதாகைகளுடன்,நெருப்பை சுடும் முழக்கங்களும்,வேட்டையாட புறப்புடும் புலிகளின் உறுமலுடன் மஜகவினர் திருச்சி ரயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய படியே காவல்துறை வேண்டுகோளை ஏற்று அனைவரும் கைதாகினர். ஈழத் தமிழர்களும்,காஷ்மீரிகளும்,நாகலாந்து மக்களும்,மணிப்பூர் மக்களும் மனிதநேயத்துடன் காப்பாற்ற படவேண்டும். என்பதே மஜக வின் நோக்கம்.#அதற்காக_எப்போதும்_எழும்_நமது_முழக்கம் தகவல்; மஜக ஊடகப் பிரிவு (திருச்சி)
துடிக்கும் குழந்தைகளின் இரத்தத்தில் தேச பக்தி பேசாதே! போர் முழக்கத்தோடு நெல்லை ரயில் நிலையத்தில் மஜகவினர் ஆர்ப்பரிப்பு
கடந்த 24.07.2016 அன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவத்தின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் கொள்கை பரப்புச் செயலாளர் #மன்னை_செல்லசாமி தலைமையில், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் #கோவை_நாசர் முன்னிலையில்,மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்துதலில் அலை அலையாய் மஜகவினர் திரண்டனர். #உரிமை_கேட்கும்_உறவுகளை_துப்பாக்கி_முனையில்__அடக்காதே! மத்திய அரசே...காஷ்மீருக்கு அமைதி குழுவை அனுப்பு போன்ற பதாகைகளை ஏந்தியும்,மஜக கொடிகளுடன் திரண்ட மக்கள் ரயில் நிலையம் முன்பு குழுமினர். #துடிக்கும்_குழந்தைகளின்_இரத்தத்தில்_தேச_பக்தி_பேசாதே! போன்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு,ஏராளமான வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். காஷ்மீரிகளின் கண்ணீரை குமரியின் எல்லையிலிருந்து முழக்கங்களை எழுப்பி துடைக்க முயலும் மனிதநேய போராட்டம் தொடரும்.... தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (நெல்லை)
மஜக ரயில் மறியலில் உணர்ச்சி மிகு நிகழ்வுகள்..
* இன்று சென்னையில் மஜக நடத்திய ரயில் மறியலில் மஜகவின் அழைப்பை ஏற்று பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தது, காஷ்மீரிகளுக்கான ஆதரவு களத்தை கூர்தீட்டியது. * 4.30 மணிக்கு 500 பேர் கூடியதும் காவல்துறை நெருக்கடி கொடுத்து, 5 மணிக்குத்தான் போராட்டத்தை தொடங்குவோம் என கூறியதும் காவல்துறை ஏற்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. வேன்களில் மக்கள் வரிசையாக திரளத் தொடங்கியதும் எழும்பூர் முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது. * போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வீதிகளில் மஜகவினர் கொடிகளுடன் ஆவேசம் பொங்க முழக்கங்களை எழுப்பி ரயில் நிலையத்தை நோக்கி ஒடினர். காவல்துறை 2 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்து தைமிய்யா தலைமையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து முன்னேறி, குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். * மாநில செயலாளர் சாதிக்பாஷா, துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, கைதுக்கு தயாராகினர். மாநில அணி நிர்வாகிகள் ஷமீம், பல்லாவரம் ஷபி மற்றும் சென்னை, காஞ்சி,திருவள்ளூர், மாவட்ட நிர்வாகிகள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தினர். * தனியரசு MLA அவர்கள் பேட்டி முடிந்ததும், கூட்டம் அலை மோதியதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி