திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 12-08-2016 பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆணையூர் அக்பர் உசேன் தலைமை வகித்தார் .பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை. யாசர் அராபத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன்,தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் மஜக பணிகள் குறித்தும் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். அடுத்து பேசிய மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும் புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கினார். நிறைவுரையாற்றிய பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக விளக்கினார். மேலும் பிற சமூக மக்களோடு எவ்வாறு ஒருங்கிணைந்து பழக வேண்டும் எனவும் கட்சியினை உற்சாகத்துடன் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும். எனவும் எடுத்துரைத்தார் . பொது செயலாளரின் உரை அரங்கில் குழுமியிருந்த மாற்று மத நண்பர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது . இறுதியாக பூவை நகர பொருளாளர் அஜ்மல் கான் நன்றியுரை கூறினார். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
தமிழகம்
தமிழகம்
தேசிய கல்விக் கொள்கை ஆபத்தானது! சட்டமன்றத்தில் எம்.தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ உரை
(கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையில் ஒரு முக்கிய பகுதி (9.8.2016) ) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..... மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை இத்தருணத்தில் எடுத்து கூற விரும்புகிறேன். இந்தியாவிலேயே சமூக நீதிக்கும், பின் தங்கிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒன்றுபட்ட இந்திய திருநாட்டில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். "மத்தியில் கூட்டாச்சி - மாநிலத்தில் சுயாட்சி" என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கருத்தை வலிமைபடுத்துவதில் பயணித்தது. பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதிலும், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்பதிலும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக இருக்கிறார் என்பது உண்மை. முன்பு, மாண்புமிகு அம்மா அவர்கள் ராஜிய சபாவில் பேசிய கன்னிப் பேச்சு சிறப்பு வாய்ந்தது. அண்ணாவின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் இருக்கிறது. எங்கள் மாநிலத்திற்க்கு POWER வேண்டும் என்றும் "POWER" வேண்டும் என்றும் பேசினார்கள். அதாவது மின்சாரம் வேண்டும்
சர்வதேச இளைஞர் தினம் : மஜக இளைஞர் அணி சார்பில் மரக்கன்று நடல், சைக்கிள் ஊர்வலம்
ஆக.12., இன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று சென்னை திருவல்லிக்கேணி தாயார் சாஹிப் தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் #மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி மரக்கன்றை நட்டு மாணவ_மாணவிகளிடம் உரையாற்றினார். தொடர்ந்து மரக்கன்றுகளை மஜக பொருளாளர் #ஹாரூன்_ரஷீது,மாநில செயலாளர் சாதிக் பாஷா,இளைஞரணி மாநிலச் செயலாளர் ஷமீம் ஆகியோர் நட்டனர். பிறகு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்னிறுத்தி சைக்கிள் ஊர்வலம் நடைப் பெற்றது.போக்குவரத்து நெரிசல் மற்றும் காலை நேர வாகன நெருக்கடி காரணமாக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் காவல்துறை அனுமதி அளித்தது. பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் M.தமிமும் அன்சாரி தலைமையில் சுற்றுச்சூழல் பதாகைகளுடன் சைக்கிள் ஊர்வலம் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் வரை நடைபெற்றது. தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சேலம்(கி) சார்பில் இரத்த தான முகாம்…
திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தி மஜக கொடியேற்று நிகழ்ச்சி
ஆக.08., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் அருகில் எடையூர்-சங்கேந்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா இன்று மாலை 5 மணியவில் சங்கேந்தி பேருந்து நிறுத்த அருகில் நடைபெற்றது. இதில் எடையூர்-சங்கேந்தி மஜக செயலாளர் தமிம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் . இந்நிகழ்ச்சியில் எடையூர் சங்கேந்தி ஜமாத் தலைவர் என்.ஹாஜா அலாவுதீன் அவர்களும் , முத்துப்பேட்டை முன்னால் நகர செயலாளர் நியாஸ், இளைஞரணி செயலாளர் அசார்தீன், நாச்சிகுளம் நிர்வாகிகள் யாஸர், பாயிஸ், யாஸீன், நியாஸ், சதாம் மற்றும் தொண்டர்கள் பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டணர். வருகை தந்த அணைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இறுதியாக சமீர் அவர்கள் நன்றிகூறினார். தகவல் : மஜக ஊடகபிரிவு.