கடந்த (21.08.16) நாகப்பட்டினம் மாவட்டத்தில், கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து கடலோர காடுகள் கோடியக்கரையில் மட்டுமே உள்ளன. இங்கு உலகில் வேறு எங்கும் கிடைக்காத அரிய மூலிகைகள் கோடியகாட்டில் மட்டுமே கிடைக்கின்றன. இக் கண்காட்சியை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு, மருத்துவ துறைக்கு இதன் பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல்; மஜக ஊடகப்பிரிவு
தமிழகம்
தமிழகம்
தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன்
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.தமிழுக்கும், தமிழர்களுக்கும் மதிப்பளிக்கும் சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தொடர்ந்து இருமுறை பணியாற்றிய பெருமை அவருக்குண்டு. ஒன்றுபட்ட மலேயா எனும் மலேசியாவில்,தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து தனது அறிவாற்றலாலும்,உழைப்பாலும் சிங்கப்பூரின் அரசியலில் உயர்ந்தவர். சிங்கப்பூரின் தந்தை லீக்ஃவான் யூ அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து, சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்தார்.எந்நிலைக்கு சென்றாலும், தாய் மொழி தமிழின் மீது அவர் அக்கறைக் கொண்டிருந்தார்.அழகான தமிழில், தமிழர்களோடு உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த தலைவர்களில் நாதனும் வரலாற்றில் இடம் பெறுகிறார்.அவரை இழந்து தவிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 23_08_16
இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை.
(18.08.2016 இன்று காவிரி ஆறு உரிமை தொடர்பாகவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் 110விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை) உரிமைகளை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் மத்தியில் ; உரிமைகளை போராடி பெறும் தலைவராக நமது முதல்வர் அம்மா அவர்கள் திகழ்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது இந்திய பண்பாடு ஆனால், அதில் ஊறுவிளைவிக்க நமது அண்டை மாநில அரசுகள் முயல்கின்றன. மலேசியாவிலிருந்து பிரிந்த நாடு சிங்கப்பூர், மலேசியாவிலிருந்துதான் அங்கு தண்ணீர் போகிறது. எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் அவ்விரு நாடுகளும் தண்ணீருக்காக மோதிக்கொண்டதில்லை. ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையில் 8 ஆண்டு கால போர் நடந்தது. ஆனால் யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதி நீரை ஈராக் தடுக்கவில்லை. வட ஆப்பிரிக்காவில் பாயும் நைல் நதி நீரை பல நாடுகள் பிரித்துக் கொள்கின்றன. அங்கு பல நாடுகளுக்கு மத்தியில் நைல் நதி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது. ஆனால்,தேசிய ஒருமைப்பாடு பேசும் நம நாட்டில் அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட மக்கள் மகிழும் வகையில் காவிரி ஆற்று உரிமையை சட்டப்படி நிலைநாட்ட தமிழ்நாடு "அரசு முயற்சி
சுதந்திர தினத்தன்று கவர்னர் ரோசையா கொடுத்த தேநீர் விருந்தில் மஜக நிர்வாகிகள்…
இந்தியாவின் 70 வது சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் ரோசய்யா அளித்த தேனீர் விருந்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்களும் கலந்துக் கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
நாகை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்பு…
ஆக.15., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். காலை 8 மணிக்கு நாகை நகர மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதில் பெண்கள், குழந்தைகள் என திரளானோர் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் இனிப்பும், தேனீரும் வழங்கப்பட்டது. பிறகு 8.30 நாகூர் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த மக்களுக்கு நாகூரில் புகழ் பெற்ற "நானகுத்தான்" பணியாரம் வழங்கப்பட்டது. தொடந்து 9 மணிக்கு நாகை MLA அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு சுதந்திர தின உறையாற்றினார். இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், நகர் மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், மஜக மாவட்டச்செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் ஹமீத் ஜஹ்பர், மற்றும் நாகை, நாகூர் மஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. பிறகு 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு கலெக்டர், S.P,