கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மஜக பொதுச்செயலாளர்!

கடந்த (21.08.16) நாகப்பட்டினம் மாவட்டத்தில், கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து கடலோர காடுகள் கோடியக்கரையில் மட்டுமே உள்ளன. இங்கு உலகில் வேறு எங்கும் கிடைக்காத அரிய மூலிகைகள் கோடியகாட்டில் மட்டுமே கிடைக்கின்றன.

இக் கண்காட்சியை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய
M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்த மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு,
மருத்துவ துறைக்கு இதன் பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தகவல்;

மஜக ஊடகப்பிரிவு