வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிப்பு…

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊசூர், பேட்டை தெருவை சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் கடத்தப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத அரியூர் காவல்துறையை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை அறிவித்திருந்தோம். இதன் காரணமாக “காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கும்” என்று காவல்துறை மேலதிகாரி உத்திரவாதம் அளித்ததால் முற்றுகைப்போராட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரச்சினை தீவிரமடைந்ததை தொடர்ந்து திவிரமாக தேடுதல் வேட்டையில் காவல்துறை முடக்கிவிடப்பட்டது. வெறும் 24 மணி நேரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு (கர்நாடக மாநிலம் பெங்களுர்) சென்று கடத்தியவர்களையும், கடத்தப்பட்ட பெண்ணையும் கையும் களவுமாக பிடித்த காவல் துறைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு வேலூர் கிழக்கு