அக்.12., நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் நலம் விசாரித்தார். அங்கிருந்த பிரசவ வார்டு, மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். தினமும் 150 நோயாளிகள் வருகை தருவதால் இதனை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி தரவேண்டும் என்றும், மேலும் கட்டிடத்தை கூடுதலாக விரிவுபடுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக MLA அவர்கள் உறுதியளித்தார். பிறகு அங்குள்ள அரசினர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும் சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து MLA கேட்டறிந்தார். புதிய கட்டிடங்கள், மின்விசிறிகள், விளக்குகள், கணினிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை ஆசிரியர்கள் கையளித்தனர். மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்தும் அவர்கள் கூறினர். அவை அனைத்தும் கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என MLA கூறினார். பிறகு சமையல் கூடம் சென்று சத்துணவு தயாரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பிறகு பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன்
தமிழகம்
தமிழகம்
ஓடிய ரயிலை தடுத்து நிறுத்தினர் மஜகவினர்!! மத்திய அரசை கண்டித்து மஜக நாகையில் ரயில் மறியல்!
அக்.12., உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்காமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழ் நாட்டுக்கு துரோகமிழைத்த பிரதமர் மோடியையும், மத்திய பஜக அரசையும் கண்டித்து நாகப்பட்டிணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து முழக்கங்களுடன் புறப்பட்ட 800 க்கும் அதிகமான மஜகவினர் ரயில் நிலையத்திற்குல் நுழைய முற்பட்டனர். அப்போது காவல் துறை தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தது. உடனே மஜகவினர் பின் வாங்கி கஸ்டம்ஸ் அருகில் இருக்கும் ரயில்வே கேட்டை நோக்கி முன்னேறினர். அப்போது காரைக்காலிலிருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலை தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். மஜகவினரின் போராட்டம் காரணமாக ரயில் இடையிலேயே ரயில் நிலையம் செல்வதற்கு முன்பாக நிறுத்தப்பட்டது. ரயில் இஞ்சிணை சூழ்ந்த மஜகவினர் முழக்கங்களையிட்டு ஆர்ப்பரித்தனர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத காவல் துறையினர் ரயில் நிலையத்திலிருந்து ஓடி வந்து அணைவரையும் கைது செய்தனர். ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலை மறிப்பதுதான் போராட்ட மரபாக இருக்கும் நிலையில், ஓடிய ரயிலை நிறுத்தி மஜகவினர் உணவுர்ப்பூர்வமாக களமாடியதாக விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் காவிரி.
மஜக சார்பில் மத்திய அரசை கண்டித்து நாகையில் இரயில் மறியல்…
முன்னேற்றம் காணும் முதல்வரின் உடல் நலம்! பிரார்த்தனைகள் வீண் போகாது!
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மொத்த தமிழகமும் வேதனையில் ஆழ்ந்தது. கட்சிகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்தினர், பிரார்தித்தனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றி மருத்துவமனைக்கு சென்று தங்கள் அன்பை, ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அனைவராலும் வரவேற்கப்படுகிறது. முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் நானும், மஜக நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்து அறிந்தோம். அவ்வப்போது அமைச்சர்களிடமும், அதிமுக நிர்வாகிகளுடமும் நான் நேரிலும், அலைபேசி வாயிலாகவும் முதல்வரின் உடல் நலம் குறித்தும் விசாரித்து அறிந்தேன். அவர்கள் தந்த பதில்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது. தற்போது முதல்வர் அம்மா அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரார்தித்தனர், வழிபாடுகளை செய்தனர். மத நம்பிக்கையற்றவர்கள் வாழ்த்துக்களை கூறினர். அவை எதுவும் வீண் போகவில்லை என்பது நிம்மதியளிக்கிறது. விரைவில் முதல்வர் அம்மா அவர்கள் வீடு திரும்பி, ஓய்வுக்கு பிறகு, வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டும்
கோவை ஒஜீர் குடும்பத்திற்கு மஜக ஒரு லட்சம் …
அக்.07., நேற்று கோவையில் மரணமடைந்த சகோ.ஒஜீர் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுவதாக இரங்கல் கூட்டத்தில் கோவை கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்ச ரூபாயும், கோவை ஐக்கிய ஜமாத் சார்பில் ஒரு லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அறிவித்தார். அங்கே பொதுமக்களிடம் சில்லரை வசூலாக 87 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பிற அமைப்புகளும், கட்சிகளும் தங்கள் தொகையை பிறகு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தகவல்: மஜக ஊடக பிரிவு (கோவை).