அக்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று (28.10.2016) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது. 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அடுத்த 10, 20 நிமிடங்களில் அதிரையின் பல்வேறு தெருக்களை சேர்ந்த ஜமாத்தார்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்ட இடத்தில் திரண்டனர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் பேசத் தொடங்கியபோது, ஒருக்கட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் வாகனப் போக்குவரத்து நெரிசலானது. பிற சமூக மக்களும் உரையை கேட்க திரண்டதால், ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் பன்மடங்காகியது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை சாடினார். அப்போது பேசியதாவது, பிரதமர் மோடியின் மனைவி குஜராத்தில் தனியாக வசிக்கிறார். இருவரும் சேர்ந்து வாழவில்லை.பிரதமர் மோடி தன் மனைவியை பராமரிக்கவில்லை. அவருக்கு உதவித் தொகையை வழங்கவில்லை. இதை ஒன்றை காரணம் கூறி இந்து மதமே பெண்களை கொடுமைப் படுத்துவதாக கூறினால் அது எப்படி அபத்தமோ.... அப்படித்தான் தலாக் விஷயத்தை பார்க்க வேண்டும். எங்காவது ஒரு முஸ்லிம் பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அதற்காக
தமிழகம்
தமிழகம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! தமிழக அரசுக்கு மஜக பாராட்டு!
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பறது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 25.10.2016 அன்று இது குறித்து மத்திய அரசு டெல்லியில் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டு, பல கேள்விகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டை, சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறியபோது, தமிழகத்தின் நலன்களையும், சிறுபான்மை மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என தெரிவித்ததை, இன்று தமிழக அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..... நன்றி ! இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27_10_16
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு… மஜக சார்பில் தீபாவளி உதவி பொருட்கள்….
நாகையில் சமீபத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி அன்பளிப்பு பைகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வழங்கினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் நலம் விசாரிப்பு…
மஜக மீனவர் அணி செயலாளர் பார்த்திபன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சகோதரர் பார்த்திபன் அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது அவர்கள் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மருத்துவமனை சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர். சகோதரர் பூரண உடல் நலம் பெற நாமும் பிராத்திப்போம். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு…
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழகத்தில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் வெற்றிப் பெற மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும். இத்தொகுதிகளில் மஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அதிமுக கூட்டணியின் வழிகாட்டுதலோடு இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.10.16