ஏப்ரல்.04., திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது திருப்பூர் நாடாளுமன்ற CPI வேட்பாளர் திரு K.சுப்பராயன் அவர்களை வெற்றி பெற மஜக அயராது உழைக்கும் என்றார். இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் A.K.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட IT WING செயலாளர் சபி மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் என திரளான மஜக சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம். 03.04.2024.
தமிழகம்
தமிழகம்
கிருஷ்ணகிரியில்… இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று தெலுங்கிலும் உருதுவிலும் உரையாற்றினார்…
ஏப்ரல்.04., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் தெலுங்கிலும், உருதுவிலும் உரையாற்றி வாக்குகளை சேகரித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை M.A., B.L., MLA., திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA,, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA, INTUC குப்புசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், இளைஞர் அணி செயலாளர் மஹபூப் ஷெரிப்,மாநகர துணைச் செயலாளர் மஹபூப் உட்பட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #கிருஷ்ணகிரி_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 03.04.2024.
திருவாரூரில்… புலிவலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாகன அணிவகுப்பு…
ஏப்ரல் 03., திருவாரூர் மாவட்டத்தில் நாகை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து மஜக தொகுதி தேர்தல் பொறுப்பு குழு தலைவர் பொதக்குடி ஜெய்னுதீன் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் மஜகவினர் வாகன அணிவகுப்புடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதின், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொதக்குடி முகமது தாஹிர் , மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சித்திக், அத்திக்கடை ரிஸ்வான் ,திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால்,அப்துல் கரீம், கமால்தின், ரியாஸ்,ஹசன் அலி, அபு , பகுருதீன், வசந்த் மற்றும் பல மஜக நிர்வாகிகள் திறலாக கலந்து கொண்டனர். தகவல்: #மனிதநேய_ஜனநாயக_கட்சி, #MJK_IT_WING #தேர்தல்_பணி_குழு #நாகை_பாராளுமன்ற_தொகுதி 02-04-2024
தேர்தல் பரப்புரை பேச்சாளர் பட்டியல்..
ராமநாதபுரம் பரப்புரை! ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
ஏப்ரல்.03., ராமநாதபுரத்தில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் போட்டியிடும் IUML வேட்பாளர் நவாஸ் கனி MP அவர்களை ஆதரித்து இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரையில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களும், காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் MLA அவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சூர், பொட்டி தட்டி, மஞ்சக்கொல்லை ஆகிய இடங்களில் திரளான பொதுமக்களுக்கு மத்தியில் தலைவர் பேசினார். அதில் பேசியதாவது... ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று முந்தைய தேர்தல் வாக்குறுதியாக மோடி கூறினார். 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. வெளிநாட்டில் உள்ள பணக்கார இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் போடப்படும் என்றார். எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. ஏழைகளை பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். இந்த தேர்தல் பரப்புரையில் நமது முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உள்ளது. 2 வது, 3 வது, 4 வது இடங்களுக்கு வர போட்டி நடக்கிறது. ஆனால் இப்போதே 39 தொகுதிகளிலும்