கிருஷ்ணகிரியில்… இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று தெலுங்கிலும் உருதுவிலும் உரையாற்றினார்…

ஏப்ரல்.04.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் தெலுங்கிலும், உருதுவிலும் உரையாற்றி வாக்குகளை சேகரித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை M.A., B.L., MLA., திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA,, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA, INTUC குப்புசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள்.

மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், இளைஞர் அணி செயலாளர் மஹபூப் ஷெரிப்,மாநகர துணைச் செயலாளர் மஹபூப் உட்பட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #கிருஷ்ணகிரி_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
03.04.2024.