தமிழகம்
தமிழகம்
மஜக சிறப்பு நிர்வாகக்குழு….
பிப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் பொதுக் குழுவுக்கு முதல் நாள் (பிப்ரவரி-27) இரவு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. அதில் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், நிகழ்ச்சி நிரல், நடப்பு அரசியல் சூழல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் மெளலா நாசர், பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில செயலாளர்கள் நாகை முபாரக், MH.ஜாபர் அலி, பல்லாவரம் ஷஃபீ, நெய்வேலி இப்ராஹிம், அஹமது கபீர், பாபு ஷாஹின்ஷா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணைச் செயலாளர்களும், மாநில அணிகளின் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 27.02.2024.
நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி… மஜக தலைமை பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…..
பிப்ரவரி.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை - AJK மஹாலில் 28.02.2024 அன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மௌலா.நாசர் அவர்களால் வாசிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- 01. எழுச்சி பயணம் தொடரும் : மனிதநேய ஜனநாயக கட்சி 8-ஆண்டுகளை கடந்து 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் இப்பொதுக்குழு நடைபெறுகிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, வீழ்ச்சிகளை எல்லாம் எழுச்சிகளாக்கி, அதிகார மையங்களை நோக்கிய நமது வெற்றி பயணம் தொடரும் என்று இப்பொதுக்குழு சூளுரைக்கிறது. 2. நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு : எதிர்வரும் 2024- நாடாளுமன்ற தேர்தலில், கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்திடும் அதிகாரத்தை இப்பொதுக்குழு தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தலைமை நிர்வாகக் குழு அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்குமாறு இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது. 03. EVM வேண்டாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, வாக்கு பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டு வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டு அதை வாக்காளர்கள் சரிபார்த்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட
மயிலாடுதுறையில்…. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு …. தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நாளை கூடுகிறது….
பிப்ரவரி.27., பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX.MLA தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முழுவதிலும் இருந்து இன்று மாலை 6 மணி முதல் மஜக பொதுக்குழு உறுப்பினர்கள் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்ட வண்ணமுள்ளனர். இரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் வந்திறங்கும் பொதுக் குழு உறுப்பினர்களை பொதுக்குழு நடைபெற உள்ள கூரை நாடு நோக்கி அழைத்து செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஒய்வெடுக்கவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்யும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் உள்ளிட்ட தலைமை
அமீரக MKP நிர்வாக மாற்றம் புதிய நிர்வாகிகள் தேர்வு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து….
பிப்.27., ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழக மக்களிடையே கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் சேவை அமைப்பாக மனிதநேய கலாச்சாரப் பேரவை திகழ்கிறது. தமிழர் ஒன்றுகூடல்கள், சமூக நல்லிணக்க பண்பாட்டு நிகழ்ச்சிகள்,இஃப்தார் நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம்கள், இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள், அமீரக தேசிய தின நிகழ்ச்சிகள், என MKP பல களங்களிலும் சேவையாற்றி வருகிறது. தாயகத்திலிருந்து தலைவர்களை, பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துதல், அதில் அமீரக அதிகாரிகளை , பிரமுகர்களை பங்கேற்க செய்தல் என செயல்பட்டு வரும் MKP தாயகத்திலிருந்து வரும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பணிகளையும் செய்து கொடுக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் அமீரகத்தில் தமிழக மக்கள் பங்கேற்ற அதிகமான மாநாடுகளை, மக்கள் ஒன்றுகூடல்களை நடத்திய அமைப்பு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. அமீரக மண்டல செயலாளராக பணியாற்றி வந்த டாக்டர் அசாலி அகமது அவர்கள் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிர்வாகம் நிறைவு பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வுக்கு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா