திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்திய மஜக!

image

image

ஜன.15., இன்று மதியம் 3;30 மணிக்கு திட்டமிட்டவாறு திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜல்லிகட்டு நடைப்பெற்றது.

30 க்கும் மேற்பட்ட காளைகளுடன் மஜகவினர் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமையில் தயார் நிலையில் இருந்தனர்.

மஜகவின் அறிவிப்பை ஏற்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக திரண்டனர். பல்வேறு நெருக்கடிகளை மீறி, காவல்துறையின் அரண்களை உடைத்து இரண்டு காளைகளை மஜகவினர் அவிழ்ந்து விட்டனர். பொதுமக்கள் அதை ஆராவாரம் செய்து கொண்டாடினர்.

இந்நிகழ்வில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ சமூதாயத்தை சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதில் மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, பொருளாலர் மரைக்காயர் சேட், ஒன்றிய செயலாளர் குணசேகர், இளைஞர் அணி செயலாளர் முகம்மது நிஸ்தார், இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் Dr.சாம் திவாகர், நாம் தமிழர் கட்சி கணேசன், கோவில் நிர்வாகி சீனிவாசன், நாயுடு பேரவை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காளையை அடக்கியவர்களுக்கு முடிவில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing),
மஜக திண்டுக்கல் மாவட்டம்