திருவாரூர்.மே.07., நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்று, மாராடைப்பால் உயிரிழந்த கிருஷ்னசாமி அவர்களின் உடல், அரசு உதவியுடன் விளக்குடி கிராமத்திற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது. கோவைக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில், இன்று காலை #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் "நீட் தியாகி" கிருஷ்னசாமி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உடனிருந்தார். பொதுச்செயலாளரிடம் கிராம மக்கள் அவர் எடுத்த முன்முயற்ச்சிகளுக்கு நன்றியை கூறினர். அவரது இறுதி சடங்கு நாளை செவ்வாய்கிழமை காலை நடைப்பெற இருக்கிறது. இதில் பல்வேறு தலைவர்களும், நீட் எதிர்ப்பு போராளிகளும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தி திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்; #MJK_IT_WING, #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_திருவாரூர்_மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
வேலூரில் தொடரும் மஜகவின் மனிதநேய பணிகள்..! தன்னெழுச்சியாக இணையும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்..!!
வேலூர்.மே.06., வேலூர் மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் ஆனைக்கட்டு தொகுதி சேக்கனுர் ஒன்றியத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் தலைமையில், அப்சல் பாஷா முன்னிலையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் குஸ்ரு கவுஸ் மொஹித்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலளார் சையத் காதர், 3ம் மண்டல பொருளாளர் ஷேக் இம்ரான், முஜாயத், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 06.05.2018
“நீட் தியாகி” கிருஷ்னசாமிக்கு 3 லட்சம் நிதி உதவி! கோரிக்கையை எற்ற தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நன்றி!
கரூர்.மே.06., இன்று கரூரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் கரூர் #அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மருத்துவ முகாமை தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் #JS_ரீஃபாயி அவர்கள் தொடங்கி வைத்தார். மாலை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மஜக கொடியை J.S ரீஃபாய் அவர்கள் ஏற்றி வைத்தார், பெயர் பலகையை மாநிலச் செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் திறந்து வைத்தார். பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீட் தேர்வின் போது மாணவ - மாணவிகளுக்கு வரம்பு மீறி நடத்தப்படும் சோதனைகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது அறிவிக்கப்படாத எமர்ஜன்சியை நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார். நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது என்பதால், அதை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்றார். #நீட், #GST, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாக குறிப்பிட்டார். மதச்சார்பின்மை, வளர்ச்சி, ஒற்றுமை ஆகிய முழக்கங்களோடு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினால்தான் தமிழக மக்கள் #காங்கிரஸ்-க்கு வாக்கு அளிப்பார்கள் என்றும் கூறினார். மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழக அரசின் குரல்வளையை நெரிப்பதாகவும், இதனால் சுதந்திரமாக செயல்பட முடியாமல்
மகன் நீட் தேர்வு எழுதும்போது தந்தை அதிர்ச்சி மரணம்! குடும்பத்தை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி MLA ஆறுதல்!
திருவாரூர்.மே.06., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்னசாமி . அவர் தனது மகன் கஸ்தூரி மாகாலிங்கத்தை #நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாக்குளம் அழைத்துச் சென்று இருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் சென்ற மனசோர்வும், வெயிலினால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை வாட்டியிருக்கிறது. இன்று காலை அவரது செல்ல மகன் எர்னாகுளத்தில் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. மகனோ தன் தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார். இத்துயரச் செய்தி தெரிந்ததும், நாகப்பட்டினத்திலிருந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முதல் நபராக அந்த கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறினார். அவருடைய மனைவியும், மகளும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் திருத்துறைப்பூண்டி MLA ஆடலரசன் அவர்களும், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்களும் வந்து சேர்ந்தனர். அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் #மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறியதாவது.. இச்சம்பவம் அனிதாவை தொடர்ந்து, இன்னொரு துயரத்தை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஏற்படுத்திருப்பதாக கூறினார். இது போன்ற குடும்பங்களின் சாபமும், கண்ணீரும் மோடி அரசையும், மத்திய அரசையும் சும்மா விடாது
எதிர்வரும் ரமலானை நல்லிணக்கம் வளர்க்க பயன்படுத்தவேண்டும்..! நெய்வேலி பள்ளியில் மஜக பொதுச்செயலாளர் ஜும்ஆ உரை..!!
கடலூர்.மே.05., நேற்று (04.05.18) கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள #மஸ்ஜிதே_ரஹ்மத் பள்ளியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ஜும்ஆ சிறப்புரை ஆற்றினார். அந்த உரையில், எதிர்வரும் ரமலானில் 30 நாட்களிலும், பள்ளிவாசல்களில் அந்தந்த ஊரைச் சார்ந்த சகோதர சமுதாயங்களை சேர்ந்தவர்களை அழைத்து நல்லெண்ண கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும், இப்தார் நிகழ்ச்சிகளில் அன்போடு அவர்களை உபசரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த ரமலானில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் . முயற்சிகளை ஜமாத்துக்களும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் அறிவுரைகளை எல்லா மக்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு ஜமாத் நடத்தும் அர் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வருகை தந்தார். அங்கு +2 தகுதி உயர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பிறகு நெய்வேலி நிலக்கரி அனுமின் நிலைய பொதுமேலாளர் திரு.ஞானசேகரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். திரு. ஞானசேகரன் அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு உள்ளூர் பிறமுகர்களையும், இதர பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் (OBC) வீரவன்னியராஜா உள்ளிட்டோரையும் சந்தித்தார். பிறகு மஜக மாநில து.