சேலம்.மார்ச்.15., டெல்லியில் நேற்று சேலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அறித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று மாலை சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள முத்து கிருஷ்ணன் இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். தலித் மாணவர்கள் மீது நவீன தீண்டாமை தற்பொழுது வட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உருவாகியுள்ளது எனவும், இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும், முத்து கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ மூலம் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும் என்றும், அதுவரை அனைத்து தோழமை சக்திகளுடன் இணைத்து மஜக பேராடும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய அதிகப்படியான இழப்பீட்டு தொகையினை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வாயிலாக சட்டமன்றத்தில் பேசி பெற்றுதருவதாகவும் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குறுத்தியளித்தார். இதில் சேலம் மாவட்டச் செயளாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் S. சைய்யத் முஸ்தபா, A.ஷேக்ரஃபிக், O.S.பாபு, A.அம்ஷத்
தமிழகம்
தமிழகம்
நாகை மீனவர்கள் உண்ணாவிரதம்… அமைச்சர்களுடன் நாகை MLA நேரில் வருகை!
நாகை. மார்ச்.14., நாகப்பட்டினத்தில் 5 மாவட்ட மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் படகுகளை மத்திய அரசு மீட்டுத்தரக் கோரியும், அவர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இன்று (14.3.17) மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மீனவ தலைவர்களுடன் உரையாடினர். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம், தமிழக அரசு கண்டிப்பாக வலியுறுத்தும் என்று கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
இலங்கையிலிருந்து 77 மீனவர்கள் வருகை… அமைச்சர்கள் மற்றும் நாகை MLA வரவேற்பு!
காரைக்கால்.மார்ச்.14., நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த, இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 77 மீனவர்கள் இன்று காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறிதுறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.14.3.17.
மதுக்கடையை அகற்ற கோரி மஜக மனு!
ஈரோடு. மார்ச்.14., ஈரோடு மேற்கு மாவட்டம் பவாணியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துவரும் டாஸ்மாக் மதுபான கடையை (எண் 3408) அகற்ற கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING ஈரோடு மேற்கு மாவட்டம்
JNU பல்கலைக்கழக மாணவர் தற்கொலை- முத்துகிருஷ்ணன் இல்லத்தில் மாணவர் இந்தியா…
சேலம்.மார்ச்.14., சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் JNU பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிலை அறிய மாணவர் இந்தியா சேலம் மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்க்கு சென்றனர். பெரும் சோகத்தை சூழ்ந்துகொண்ட சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் முத்துகிருஷ்ணனின் அண்ணனிடம் நடந்த விபரங்களை கேட்ட பொழுது தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறினார்.மேலும் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை,தலித் மாணவர்களின் சுயமாரியாதைக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்று முத்துகிருஷ்ணனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முத்துகிருஷ்ணனின் தற்கொலையில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்று ஆறுதல் கூறினர். இச்சந்திப்பில் பாபு, சதாம், அம்ஜத்,சாந்த் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: ஊடக பிரிவு, மாணவர் இந்தியா, சேலம் மாவட்டம். #Maanavar_India