ஏப்.09, இன்று நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நாகை ஒன்றியத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவச்சேரி, தேமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி செயல் அலுவலர் சாக்ரடிஸ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு ரேஷன் கடையில் ஒருவர் பின் ஒருவராக மைக் மூலம் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக வந்து பொருட்களை மக்கள் பெற்று சென்றனர். பிறகு பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு சென்றவர். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அங்கு குடிநீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் விநியோகம் குறித்தும் ஊர் பெரியவர்களிடம் விசாரித்தார். பிறகு அதிகாரிகளிடம் அது பற்றி கூறி, உரிய கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அங்கு பணியில் இருந்த காவல் துறையினரை சந்தித்து அவர்களை பாராட்டினார். அங்கு வந்த மஜக ஒன்றிய செயலாளர் ஜலாலிடம், கடமையில் ஈடுபடும் காவலர்கள், சுகாதாரத் துறையினருக்கு மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2383198338446594&id=700424783390633
கொரோனா வைரஸ்
மஜக காயல்பட்டினம் நகரம் சார்பில் தொடர்ச்சியாக கபசுரக்குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி_ஏப்-9., மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீர் தொடர்ச்சியாக இன்று 4-வது நாளாக விநியோகம் செய்யப்பட்டது. காயல்பட்டிணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் வழிகாட்டுதலில் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இன்று மாலை பெரிய நெசவு தெரு மற்றும் சின்ன நெசவு தெரு பகுதிகளில் வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியை பேணி விதிமுறைகளை கடைபிடித்து விநியோகம் செய்யப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் A.R. சாகுல் ஹமீது தலைமையில் நெசவு ஜமாத் தலைவர் KKS காதர்மீரான் அவர்கள் கபசுரக் குடிநீர் விநியோகித்து துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், காயல்பட்டிணம் நகர நிர்வாகிகள் ஜிபுரி, மீரான், இப்னுமாஜா, இர்ஷாத், சித்தீக், ஷேக் முகமது மற்றும் மஜக-வினர் கலந்து கொன்டு கபசுரக் குடிநீர் விநியோகம் செய்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_மாவட்டம் 09-04-2020
மஜக சார்பில் கபசுரகுடிநீர் தயாரித்து விநியோகம்!
ஏப்.09, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து இரண்டு நாட்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இக்குடிநீரை ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து வீடுவீடாக சென்று தேவைக்கேற்ப விநியோகம் செய்து வருகின்றனர். சமூக விலகலை கடைப்பிடித்து கூட்டம் சேராமல் விநியோகம் செய்யும் பணியினை நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் மேற்பார்வையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
நாகையில் தற்காலிக இடங்களில் காய்கனி விற்பனை : முதமிமுன்அன்சாரி MLA நேரில் ஆய்வு!
ஏப்ரல்.09, நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று மு.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முக கவசம் அணியுமாறும் வலியுறுத்தினார். பிறகு நகராட்சி ஆணையர் ஏகராஜிடம், நடமாடும் காய்கறி கடை குறித்தும் கேட்டறிந்தார். 130 ரூபாய் மதிப்புள்ள காய்கறி பை 100 ரூபாய்க்கு வீதிகளுக்கு சென்று விற்கப்படுவதாகவும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார். பிறகு அங்கு மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இறைச்சி மற்றும் கோழிக் கடைகளுக்கும் சென்று , அங்கு தூய்மை ஒழுங்கை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிறகு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து பூ மற்றும் காய்கனி வணிகர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று, அங்கு பணியாற்றும் தன்னார்வலர்களையும் சந்தித்து பாராட்டினார். இதில் ஷேக் அஹ்மதுல்லா, முரளி, லவ்லி யூசுப், இஸ்மத், மகேஷ், கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382901811809580&id=700424783390633
மஜக துறைமுகம் பகுதி சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்..!
சென்னை.ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இக்குடிநீரானது சளி, இருமல் உள்ளிட்டவைகளை சீர் செய்வதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது என்பதால் மக்கள் ஆர்வமுடன் பெற்று அருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை துறைமுகம் சிக்கந்தர், அம்ஜத் உள்ளிட்ட மஜகவினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் மஜக மருத்துவரணி மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை விநியோகித்தார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_மாவட்டம் 09.04.2020