மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ஆஷிக், ஈஸ்வரன், நெளபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் ஆஷிக் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_தெற்கு_மாவட்டம் 15.12.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஜனவரி.08 கோவை சிறை முற்றுகை.. மஜக அணி நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேராய்வு…
கோவையில் ஜனவரி 8, 2022 அன்று நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில், மஜகவின் முக்கிய அணிகளின் திட்டமிடல்கள் தொடங்கியுள்ளது. தலைமையகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இது குறித்து கலந்துரையாடினார். மருத்துவ சேவை அணி சார்பில் போராட்ட களத்தில் ஆம்புலன்ஸ் சேவைகளை மேற்கொள்வது என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ சேவைக்குழு ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருப்பது என்றும், இதில் சீருடையுடன் மருத்துவ சேவை அணியினர் பங்காற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இளைஞர் அணி சார்பில் சீருடை அணிந்த இளைஞர் பட்டாளம் பாதுகாப்பு, கட்டுக்கோப்பு உள்ளிட்ட களப் பணிகளில் ஈடுபடுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. மாணவர் இந்தியா சார்பில் கலைக்குழு அமைக்கப்பட்டு பரப்புரைகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இந்த அணிகளின் சார்பில் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும், அடுத்தடுத்து திட்டமிட்டு பணிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ReleaseLongTermPrisoners #தலைமையகம்
போராட்ட விளம்பரங்களில் கூடுதல் கவனம்… மஜக வட சென்னை (மே), திருவள்ளுர் (கி), மத்திய சென்னை (மே) மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!
ஜனவரி 8, 2022 அன்று பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை சிறை முற்றுகை போராட்டம் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில் சென்னையில் மஜக-வினர் தீவிரமாக களத்தில் குதித்துள்ளனர். ஆயத்த பணிகளின் தொடர்ச்சியாக இன்று மத்திய சென்னை மேற்கு, திருவள்ளுர் கிழக்கு, வட சென்னை மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளின் நேர்காணலில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர். ஜனவரி 8 போராட்டம் குறித்து அதிக அளவில் சுவர் விளம்பரங்கள் செய்வது குறித்தும், பரப்புரைகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களை திரட்டுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விரைவில் மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் ஆகியோரும் பங்கேற்றனர். மத்திய சென்னை மேற்கு மாவட்டம்,
கோவை காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08, அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10, ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அது தொடர்பாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதிப் குமார், அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் ஜன 08, அன்று நடைபெற உள்ள கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் தொடர்பான கடிதத்தை ஆணையரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, ஆகியோர் உடனிருந்தனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongtermprisoners தகவல், #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம். 14.12.2021.
ஜனவரி_08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..
டிச:15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்க்கு வருகை தரும் பொது செயலாளரை சிறப்பாக வரவேற்பது எனவும், மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ்,பக்கீர் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஜாவித்,ஹாரிஸ்,மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 14.12.2021