சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா (தற்) கொலை செய்து கொண்டார். சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து கடந்த ( 03.09.2017 ) அன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்த மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையினர் தடுத்து மஜகவினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரவுஃ ரஹிம் , திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும்
செய்திகள்
மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோனை கூட்டம்..!
மதுரை.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் (மாவட்ட பொறுப்பாளர்) முஹம்மது சைஃபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் உமர் பாருக், பொருளாளர் ஜபர்லால் மற்றும் துணைச் செயலாளர்கள்,மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 09.01.2018
மஜக மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..
மதுரை.ஜன.09,, மனிதநேய ஜனநாயகக் கட்சி மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை ஹவுஸிங் போர்டு வில்லாபுரத்தில் மஜக மாநில ஒருங்கினைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில துணைச் செயலாளார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது சைஃபுல்லா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் ஆதில்பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் :: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING, #மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம்.
ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..
ஈரோடு.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு பொறுப்புக்குழுவை நியமித்து அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று 08-01-2018 மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குழு தலைவர் ஈரோடு எக்சான் தலைமையில் நடைபெற்றது. மாநில துனைச்செயலாளர் A.பாபு ஷாஹின்ஷா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஸ்டீல் நிஜாம், மார்க்கெட் நாசர் மற்றும் திலீப் குமார், யாஸர் அராபத், ரியாஸ் காதர் உசேன், ஜெ.சிராஜ், ஜாபர் சாதிக், குளம் ஜாகிர், ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முதல்கட்டமாக அணிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைசெய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.
கோவையில் மஜகவின் முயற்சியில் தமிழக அரசின் ₹6 இலட்சம் நிவாரண நிதி..! மஜக நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்த தம்பதியர்..!!
கோவை.ஜன.08., கோவை ஜி.எம். நகர் பகுதியில் கடந்த 07.06.17 அன்று மின்சாரம் தாக்கி சாஹிதா பானு, சல்மான், என்ற இரு குழந்தைகள் மரணமடைந்தனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மற்றும் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் உயிரிழந்த குழந்தைகள் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அதை தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்கு மஜக சார்பில் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் நேற்று 07.01.18 கோவை செல்வபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் அக்குடும்பத்தாருக்கு 6 லட்சரூபாய் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கினார். அதை தொடர்ந்து இன்று மஜக அலுவலகம் வந்த அக்குடும்பத்தார் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோரை சந்தித்து நிவாரண நிதியை பெற்று தந்ததற்காக மஜக தலைமை