கத்தாரிலிருந்து தாயகம் வந்தவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!!


திருச்சி:ஆக.04.,

வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேவை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தாரிலிருந்து இராமநாதபுரம், மற்றும் அரியலூர், மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் வயதான மூதாட்டி, ஆகியோர் துணையில்லாமல் தனியாக திருச்சி விமான நிலையம் வருவதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் திருச்சி மஜக விமான நிலைய சேவைக்குழுவினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் பாபுபாய், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காதர், ஆகியோர் விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர்.

மேலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்த அதிகாரிகள் திருச்சியிலேயே தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்ப முயற்சித்தனர்.

இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசிய மஜக-வினர் கர்ப்பிணிப் பெண் மற்றும் மூதாட்டி குறித்து எடுத்துக்கூறி அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அவர்களை சொந்த ஊரில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று வாகனம் ஏற்பாடு செய்து மஜகவினர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

மஜக-வினரின் இப்பேருதவிக்கு அவர்களின் உறவினர்கள் தொலைபேசியில் நன்றி தெரிவித்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்
04.08.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.