(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) தமிழ்நாட்டின் முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றிருக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் #டாக்டர்_அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் . 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு எங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் . முதல்வராக பொறுப்பேற்ற 1 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுருப்பது தமிழ் நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது . பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்திருப்பதும் , முதல்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதும் பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது . கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி , 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் தள்ளுபடி , தாலிக்கு 1 பவுன் தங்கம் , நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக உயர்த்தி இருப்பது என
செய்திகள்
12ஆம் வகுப்பு வெற்றியாளர்களுக்கு மஜகவின் வாழ்த்துக்கள் .!
இவ்வாண்டு +2 தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் . போட்டிகளும் , நெருக்கடிகளும் நிறைந்த நவீன உலகில் , உங்களின் எதிர்காலத்திற்கும் , இயற்கை அறிவிற்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் கூரிய கவனம் செலுத்த வேண்டும் . வசந்த காலத்தின் வண்ணப் பறவைகளாய் சிறகு விரிக்க தயாராகுங்கள் . இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் , நம்பிக்கையை இழக்காமல் உத்வேகத்துடன் அடுத்த முயற்சியில் ஈடுபடுங்கள் . விழுவது வீழ்வதற்கல்ல .... எழுவதற்கே என்பதை எண்ணி மன உறுதியோடு புறப்படுங்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..! அன்புடன் M. தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-05-2016
மஜக வேலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் S.S.ஹாரூன் ரசீத் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்…
கொட்டும் மழையில் மஜக பொதுச்செயலாளர் வாக்களித்தார் ..!
நாகப்பட்டினம் தொகுதியில் பிரம்மாண்ட பேரணி ..!
மே.14., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக-மஜக கூட்டணி சார்பில் பரப்புரை நிறைவடைவதையொட்டி இன்று (14-05-2016) மாலை 4 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற்றது . கோட்டை வாசலில் புறப்பட்ட பேரணி கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை கடந்து RDO அலுவலகம் நோக்கி புறப்பட்டது . திறந்த ஜீப்பில் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம் , அமைச்சர் ஜெயபால் , தொகுதி செயலாளர் ஆசைமணி , நகரச் செயலாளர் R.சந்திரமோகன் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் , குணசேகரன் , நகர்மன்ற தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் புறப்பட்டனர் . அவர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் , பொதுமக்களும் அணிவகுத்தனர் . கார் , ஜீப் , ஆட்டோக்களும் அணிவகுத்தன . ஊர்வலம் ஒரு முனையை கடக்க 10 நிமிடங்கள் ஆனது . வழியெங்கும் சாலையோரங்களிலும் , கட்டிடங்களிலும் பொதுமக்கள் நின்றுக் கொண்டு கைகளை அசைத்து வரவேற்பு கொடுத்தனர் . போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் தொண்டர் அணியினர் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியப்படியே வந்தனர் . எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தப்போது ,