மே.14., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக-மஜக கூட்டணி சார்பில் பரப்புரை நிறைவடைவதையொட்டி இன்று (14-05-2016) மாலை 4 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற்றது . கோட்டை வாசலில் புறப்பட்ட பேரணி கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை கடந்து RDO அலுவலகம் நோக்கி புறப்பட்டது . திறந்த ஜீப்பில் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம் , அமைச்சர் ஜெயபால் , தொகுதி செயலாளர் ஆசைமணி , நகரச் செயலாளர் R.சந்திரமோகன் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் , குணசேகரன் , நகர்மன்ற தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் புறப்பட்டனர் . அவர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் , பொதுமக்களும் அணிவகுத்தனர் . கார் , ஜீப் , ஆட்டோக்களும் அணிவகுத்தன . ஊர்வலம் ஒரு முனையை கடக்க 10 நிமிடங்கள் ஆனது . வழியெங்கும் சாலையோரங்களிலும் , கட்டிடங்களிலும் பொதுமக்கள் நின்றுக் கொண்டு கைகளை அசைத்து வரவேற்பு கொடுத்தனர் . போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் தொண்டர் அணியினர் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியப்படியே வந்தனர் . எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தப்போது ,
Author: admin
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் சந்திப்பு.
நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் மனிதநேய கலாச்சார பேரவை. மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம். 55278478 - 55260018 - 60338005.
மஜக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தும் முறை மாதிரி…
வேலூரில் வீதியெங்கும் எழுச்சி…
வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து செல்லும் இடங்களில் மக்களின் உற்சாக வரவேற்பும்,அதிமுகவிற்கு மகத்தான ஆதரவும் வழியெங்கும் கிடைக்கப்பெறுகிறது..இதனால் அதிமுக மற்றும் மஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். மஜக ஊடகப்பிரிவு
நாகப்பட்டினம் தொகுதிக்கான அதிமுக மஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு !
மே,08.,அதிமுக – மஜக கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று (07-05-2016) வெளியிடப்பட்டது . இதில் 100 வாக்குறுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு ‘ நூற்றுக்கு நூறு ‘ என தலைப்பிடப்பட்டது . நாகை – நாகூர் நகராட்சி பகுதி , நாகை ஒன்றியம் , திருமருகல் ஒன்றியம் என தனித்தனியாக பிரிக்கப் பட்டு தொகுதியின் தேவைகள் – தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன . மஜக பொதுச் செயலாளரும் தொகுதி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட முதல் பிரதியை தொகுதி பொறுப்பாளரும் , முன்னால் அமைச்சருமான ஜீவானந்தம் பெற்றுக் கொண்டார் . இரண்டாவது பிரதியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பெற்றுக்கொண்டார் . இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , அதிமுகவின் தொகுதி செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி , அதிமுகவின் திருமருகல் ஒன்றிய செயலாளர் இராதா கிருஷ்ணன் , முன்னால் நாகை சட்டமன்ற உறுப்பினர் கோடிமாரி , மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் , மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா , நாகை நகர