நாகப்பட்டினம் தொகுதிக்கான அதிமுக மஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு‬ !

மே,08.,அதிமுக – மஜக கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று (07-05-2016) வெளியிடப்பட்டது . இதில் 100 வாக்குறுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு ‘ நூற்றுக்கு நூறு ‘ என தலைப்பிடப்பட்டது . நாகை – நாகூர் நகராட்சி பகுதி , நாகை ஒன்றியம் , திருமருகல் ஒன்றியம் என தனித்தனியாக பிரிக்கப் பட்டு தொகுதியின் தேவைகள் – தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன .

மஜக பொதுச் செயலாளரும் தொகுதி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட முதல் பிரதியை தொகுதி பொறுப்பாளரும் , முன்னால் அமைச்சருமான ஜீவானந்தம் பெற்றுக் கொண்டார் . இரண்டாவது பிரதியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பெற்றுக்கொண்டார் .

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , அதிமுகவின் தொகுதி செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி , அதிமுகவின் திருமருகல் ஒன்றிய செயலாளர் இராதா கிருஷ்ணன் , முன்னால் நாகை சட்டமன்ற உறுப்பினர் கோடிமாரி , மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் , மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா , நாகை நகர அதிமுக செயலாளர் R. சந்திரமோகன் , நகர்மன்ற தலைவி மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

– மஜக ஊடகப்பிரிவு