மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை கல் மனம் கொண்டவர்களையும் பொன்மனம் கொண்டவர்களாக மாற்றிடும் இனிய மாதம்தான் ரமலான் இம்மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் இறையச்சத்தோடு நோன்பு நோற்று உள்ளத்தையும் உணர்வையும் ஒழுங்குபடுத்திடும் இனையற்ற பயிற்சியை உலகம் முழுதும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள் தனக்காகவும் பிறருக்காகவும் பசியோடு மனம் உருகி ஒவ்வொருவரும் செய்யும் பிரார்தனைகளும் திருக்குஆனின் பக்கங்களில் விழிகளை புதைத்துக் கொள்ளும் அனுபவங்களும் வார்த்தைகளில் வர்னிக்க முடியாத பரவசத்தை இம்மாதம் முழுதும் தருகின்றன இம்மாதத்தின் நிறைவில் அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் வானத்தில் வளைந்த கவிதையாய் தென்படும் பிறையை பார்த்த மகிழ்ச்சியில் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாட உலகமெங்கும் முஸ்லிம்கள் தயாராகிறார்கள் புத்தாடைகளையும், வாசனை திரவியங்களையும், மனம் வீசும் ருசிகர உணவுகளையும்தாண்டி இறைவனை புகழ்பாடி தொடங்கும் பெருநாள் தொழுகையும், அங்கே ஒருவரையொருவர் பகை மறந்து, மனமுவந்து, கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் இந்த நாள் மீன்டும் எப்போது வரும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன அன்றைய தினம் அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் அள்ளி,
Author: admin
நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக பித்ரா விணியோகம்
இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம்
தூத்துக்குடி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி(MJK) யின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஃபைசல் மெளலவி அவர்கள் ஃபித்ரா வினியோகத்தை தொடங்கி வைத்தார் 70 பயனாளிகளுக்கு 13175 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். தகவல் : மஜக ஊடகபிரிவு
நாகை நகராட்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் வேலுமணியுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு .!
நாகப்பட்டினம் நகராட்சி 150 ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடவிருக்கிறது . இதனையொட்டி நாகை , நாகூர் நகரங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது . இது குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களும் , நாகை நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் அவர்களும் ஆலோசித்து , அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன . புதிய பூங்காக்களை உருவாக்குதல் , குளங்களை தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி தளம் அமைத்தல் , கடற்கரைகளை அழகு படுத்துதல் , சாலைகளை சீரமைத்தல் , குடிநீர் தொட்டிகள் அமைத்தல் , வரவேற்பு வளைவுகள் கட்டுதல் , பள்ளிகூட கட்டிடங்களின் தரம் உயர்த்தி விரிவாக்குதல் , ஆங்காங்கே கழிப்பறைகளை கட்டுதல் , நகராட்சி அங்காடிகளை சீரமைத்தல் , புதிய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான உத்தேச திட்ட மதிப்பீடு 52 கோடி ரூபாய் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டது . இன்று கோவை வந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.
விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி…
ரம்ஜான்_பண்டிகை முன்னிட்டு சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.சையதுசுல்தான்இப்ராஹிம். தலைமையில்,அ.இ.அ.தி.மு.க. சிவகாசி நகர செயலாளரும். சிவகாசி நகர்மன்ற துணை தலைவருமான Kaa.அசன்பதுருதீன் அவர்கள், வேட்டி சேலை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் 20 வது வார்டு அ.தி.மு.க.செயளாலர்.சாகுல் ஹமிது,ரவி,மஜகமாவட்டபொருலாளர்.காஜாமைதீன், நகர பொருலாளர். சேக். முகமது, அபுதாகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு